சென்னை புறநகர் பகுதிகளில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்ற 3 வாலிபர்கள் கைது: பைக் மற்றும் 2 கிலோ கஞ்சா பறிமுதல்
2022-09-26@ 04:42:03

துரைப்பாக்கம்: சென்னை பெருங்குடி, காரப்பாக்கம், சோழிங்கநல்லூர், செம்மஞ்சேரி ஆகிய பகுதிகளில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக கண்ணகி நகர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து, செம்மஞ்சேரி உதவி கமிஷனர் ரியாசுதீன் தலைமையில் கண்ணகி நகர் இன்ஸ்பெக்டர் முருகன், சப் இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார், தலைமை காவலர் லிவிங்ஸ்டன் ஆகியோர் கொண்ட தனிப்படை மாறுவேடத்தில் கண்காணித்து வந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை கண்ணகி நகர் நுழைவாயில் அருகே ஒரு பைக்கில் மூன்று பேர் வந்தனர். போலீசாரை கண்டதும் பைக்கை வந்த வழியே திருப்ப முயன்றனர். அப்போது, போலீசார் அவர்களை மடக்கி பிடித்து விசாரணை செய்ததில், முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தனர்.
இதனால் அவர்களை சோதனை செய்ததில் 2 கிலோ கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. போலீசார் மூவரையும் கண்ணகி நகர் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர். இதில், வேளச்சேரி, எம்ஜிஆர் நகரை சேர்ந்த டேட்டா ஆர்ட்டிஸ்ட் சென்மோன் (26), சோழிங்கநல்லூர் 6வது தெருவை சேர்ந்த மொபைல் ஷோரூம் ஊழியர் மணிகண்டன் (25), பெருங்குடி சீவரம் 2வது தெருவை சேர்ந்த ஆன்லைன் டெலிவரி ஊழியர் ராகுல் (19) என தெரிய வந்தது. மேலும், இவர்கள் மூவரும் சென்னை சத்யா நகரில் கஞ்சா மொத்தமாக வாங்கி இப்பகுதிகளில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்தது தெரியவந்தது.
இதனையடுத்து போலீசார் மூன்று பேரையும் கைது செய்து ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். இவர்களிடமிருந்து 2 கிலோ கஞ்சா, ஒரு பைக் பறிமுதல் செய்யப்பட்டன. இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘குறுக்கு வழியில் குறுகிய காலத்தில் பணம் சம்பாதிப்பதற்காக இளைஞர்கள் சென்னை சத்யா நகரில் இருந்து கஞ்சா வாங்கிக்கொண்டு இப்பகுதிகளுக்கு வந்து கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக எங்களுக்கு தகவல் வந்தது. எனவே, தனிப்படையினர் மூலம் தீவிரமாக கண்காணித்து வந்தோம். இந்நிலையில்தான், மூன்று பேரும் பிடிபட்டுள்ளனர். போதை பொருட்களை விற்கும் மற்ற நபர்களைகண்காணித்து கைது செய்ய உள்ளோம்’’ என்றார்.
மேலும் செய்திகள்
ஐடி நிறுவனங்களில் வேலை தருவதாக கூறி நட்சத்திர ஓட்டலில் தங்க வைத்து இளம்பெண்களை ரூ.1 லட்சத்திற்கு விற்ற பாலியல் புரோக்கர் அதிரடி கைது: 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு
சவுகார்பேட்டையில் அதிகாலை பரபரப்பு சம்பவம் ஆந்திர நகை வியாபாரிகளிடம் ரூ.1.40 கோடி கொள்ளை: போலீஸ் எனக்கூறி காரில் வந்து கைவரிசை
ஆபாச வீடியோவை வாட்ஸ்அப்பில் பரப்பி விடுவோம் என சிறைக்கு சென்று வந்தவர்களிடம் ரூ.3 லட்சம் கேட்டு மிரட்டிய 2 பேர் கைது: பாஜ நிர்வாகி என கூறி மோசடிக்கு முயற்சி
திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் விலை உயர்ந்த கேமரா திருடிய 2 பேர் கைது
முன் விரோத தகராறில் வாலிபரை வெட்டி கொல்ல முயற்சி: 7 பேர் கைது
புறநகர் பகுதிகளில் தொடர் திருட்டு 2 பேர் சிக்கினர்
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!