பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தால் கடும் நடவடிக்கை: தென்மண்டல ஐஜி அஸ்ரா கார்க் எச்சரிக்கை
2022-09-26@ 02:31:08

மதுரை: பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தென்மண்டல ஐஜி அஸ்ரா கார்க் எச்சரிக்கை விடுத்துள்ளார். தென்மண்டல ஐஜி அஸ்ரா கார்க் மதுரையில் நேற்று அளித்த பேட்டி: தென்மாவட்டங்களில் அசம்பாவிதங்கள் நிகழாமல் இருக்க போலீசார் தொடர்ந்து தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவுப்படி பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கக்கூடிய காரியங்களில் ஈடுபடுவோர் அல்லது தூண்டுவோர் அல்லது கூட்டுச்சதி செய்வோர் யாராக இருப்பினும் அவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
தேவைப்படும் பட்சத்தில் அம்மாதிரியான காரியங்களில் ஈடுபடுவோர் தேசிய பாதுகாப்புச்சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள். தென்மாவட்டங்களில் 20 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறனர். பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம். விளம்பரத்திற்காக தனக்குத்தானே பெட்ரோல் குண்டுகளை வீசிக் கொண்டாலும், அவர்கள் மீதும் நடவடிக்கை பாயும் என்றார்.
மேலும் செய்திகள்
மதுரை பூசாரிப்பட்டியில் 10 ஆயிரம் ஆண்டுகள் பழமையான பாறை ஓவியங்கள் கண்டுபிடிப்பு
போடிமெட்டு அருகே தேயிலை தோட்டத்தில் புலி நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்
தென்காசி கடத்தல் விவகாரத்தில் மீண்டும் பரபரப்பு; வழக்கை வாபஸ் வாங்கக் கோரி காதல் கணவனிடம் இளம்பெண் கதறல்: `இருவரும் மனப்பூர்வமாக பிரிந்து விடுவோம்’ என்று வேண்டுகோள்
நாளை தைப்பூசத் திருவிழா: திருச்செந்தூரில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்
அதிகரிக்கும் குற்றச்செயல்கள்: சிம்கார்டுகளை கூவிகூவி விற்பதை தடுக்க கோரிக்கை
வளர்ப்பு யானைகளை பராமரிக்கும் பயிற்சி பெற தெப்பக்காடு முகாம் பாகன்கள் 8 பேர் தாய்லாந்து பயணம்
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!