விராலிமலை முருகன் கோயிலில் நவராத்திரி 10 நாள் விழா நாளை துவக்கம்
2022-09-25@ 11:16:33

விராலிமலை: விராலிமலை முருகன் கோயிலில் நவராத்திரி 10நாள் விழா நாளை தொடங்குகிறது. விராலிமலை முருகன் மலைக்கோயில் சிறப்பு பெற்ற தலமாகும் 207 படிகள் கொண்ட இம்மலை கோயிலில் அருணகிரிநாதருக்கு அஷ்டமா சித்தி எனும் கூடு விட்டு கூடு பாயும் வித்தையை முருகன் கற்றளியதாக தல வரலாறுகள் கூறுகின்றன. ஆறுமுகங்களுடன் வள்ளி, தெய்வானை சமேதராக முருகன் காட்சியளிப்பது இம்மலைக் கோயிலின் தனி சிறப்பாகும்.
தேசிய பறவையான மயில்கள் இந்த மழைக்குள் தோகையை விரித்தாடி சுற்றி திரிவது இக்கோயிலுக்கு வரும் பக்தர்களின் கண்களுக்கு விருந்தாக அமையும். பல்வேறு சிறப்புகள் கொண்ட இந்த மலைக்கோயில் வைகாசி விசாகம், தைப்பூசம், சூரசம்காரம் உள்ளிட்ட விழாக்கள் வெகு விமர்சையாக கொண்டாடப்படும் அந்த வகையில் நாளை நவராத்திரி விழா தொடங்குகிறது மாலை 7 மணி அளவில் மலை மேல் முருகன் சன்னதியில் தொடங்கும் விழாவில் விதவிதமான அலங்கரிக்கப்பட்ட கொலுக்கள் காட்சிப்படுத்தப்படும்.
10 நாட்கள் நடைபெறும் இவ்விழாவின் இறுதியில் அலங்கரிக்கப்பட்ட உற்சவமூர்த்தி மலை மேல் இருந்து கீழ் இறங்கி வந்து திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.10 நாள் நடைபெறும் இவ்விழாவில் முருகனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள்
நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில், ரூ.23.71 கோடி மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
கேரட், பீட்ரூட்டை சமவெளியில் சாகுபடி செய்து மண் காப்போம் இயக்கம் சாதனை!.. விவசாயிகளுக்கு வழிகாட்டும் ஈஷாவின் மாதிரி பண்ணை
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: தேர்தல் பறக்கும் படையினர் பணப்பட்டுவாடாவை தடுக்க மும்முரம்
தமிழ்நாடு வார்த்தையை பயன்படுத்தி முதல்வரின் உருவம் வரைந்த அரசு கல்லூரி மாணவி: பாராட்டுகள் குவிகிறது
நெல்லை, தூத்துக்குடியில் பறவைகள் கணக்கெடுப்பு தொடக்கம்: பணியில் ஈடுபட்டுள்ள 200-க்கு மேற்பட்டுள்ள தன்னார்வலர்கள்
பள்ளி பேருந்து ஏரியில் கவிழ்ந்து 22 மாணவர்கள் படுகாயம்
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!
மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற செல்லப் பிராணிகள் திருவிழா: லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள Pet Fed நிகழ்ச்சி
பிரான்ஸ் அரசின் ஓய்வூதிய சீர்திருத்தக் கொள்கைக்கு எதிர்ப்பு: அதிபர் மேக்ரான் அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்..!!
பெரிய அரங்குகள், நூலகங்கள், நவீன வசதிகள்: புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் மாதிரி புகைப்படங்கள் வெளியீடு..!!
தமிழ்நாடு பெயரை மாற்றுமாறு கூறிய ஆளுநர் ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து காங். கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!!