கொரியா ஓபன் டென்னிஸ் பைனலில் இன்று ஆஸ்டபென்கோ - அலெக்சாண்ட்ரோவா பலப்பரீட்சை
2022-09-25@ 00:48:27

சியோல்: கொரியா ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில், யெலனா ஆஸ்டபென்கோ - எகடரினா அலெக்சாண்ட்ரோவா இன்று மோதுகின்றனர். அரையிறுதியில் இங்கிலாந்தின் எம்மா ரடுகானுவுடன் (19 வயது, 77வது ரேங்க்) மோதிய முதல்நிலை வீராங்கனை ஆஸ்டபென்கோ (25 வயது, லாத்வியா) முதல் செட்டை 4-6 என்ற கணக்கில் இழந்து பின்தங்கினார். எனினும், 2வது செட்டில் அதிரடியாக விளையாடி புள்ளிகளைக் குவித்த ஆஸ்டபென்கோ 6-3 என்ற கணக்கில் கைப்பற்றி பதிலடி கொடுக்க சமநிலை ஏற்பட்டது. 3வது செட்டில் ஆஸ்டபென்கோ 3-0 என முன்னிலை வகித்தபோது ரடுகானு காயம் காரணமாக ஆட்டத்தில் இருந்து விலகினார். இதையடுத்து ஆஸ்டபென்கோ இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
மற்றொரு அரையிறுதியில் ஜெர்மனி வீராங்கனை டட்டியானா மரியாவை (35 வயது, 80வது ரேங்க்) எதிர்கொண்ட ரஷ்ய நட்சத்திரம் எகடரினா அலெக்சாண்ட்ரோவா (27 வயது, 24வது ரேங்க்) 6-2, 6-4 என்ற நேர் செட்களில் வென்று பைனலுக்கு தகுதி பெற்றார். இப்போட்டி 1 மணி, 9 நிமிடத்திலேயே முடிவுக்கு வந்தது. இன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் ஆஸ்டபென்கோ - அலெக்சாண்ட்ரோவா மோதுகின்றனர். இரட்டையர் பிரிவு பைனலில் அமெரிக்காவின் ஆசியா முகமது - சப்ரினா சாந்தமரியா இணை கிறிஸ்டினா மிளாடெனோவிச் (பிரான்ஸ்) - யானினா விக்மேயர் (ருமேனியா) ஜோடியை சந்திக்கிறது.
Tags:
Astabenko vs Alexandrova in Korea Open Tennis Final today கொரியா ஓபன் டென்னிஸ் பைனலில் இன்று ஆஸ்டபென்கோ - அலெக்சாண்ட்ரோவாமேலும் செய்திகள்
சில்லி பாயின்ட்...
ரஞ்சி கோப்பை காலிறுதி 93 ரன்னில் சுருண்டது ஆந்திரா: ம.பி.க்கு வெற்றி வாய்ப்பு
3வது ஒருநாள் போட்டி: இங்கிலாந்துக்கு ஆறுதல் வெற்றி.! 6 விக்கெட் கைப்பற்றி அசத்திய ஆர்ச்சர்
மகளிர் டி 20 இறுதி போட்டி; இந்தியா தென்ஆப்பிரிக்கா இன்று மோதல்
பறந்து வந்த பந்தை பாய்ந்து பிடித்த சூர்யகுமார்
சுப்மன் கில் தில்லான ஆட்டத்தால் நியூசியை வீழ்த்தி தொடரை வென்றது இந்தியா; அனைத்து வீரர்களும் மிக சிறப்பாக செயல்பட்டனர்: கேப்டன் ஹர்திக் பாண்டியா பாராட்டு
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!