மியான்மரில் சிக்கி உள்ள இந்திய ஊழியர்களை அரசு மீட்பது கடினம்: வெளியுறவுத் துறை மறைமுக அறிக்கை
2022-09-25@ 00:44:37

புதுடெல்லி: மியான்மர் அரசின் கட்டுப்பாட்டில் இல்லாமல், ஆயுத கும்பல்களின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் இந்திய ஐடி பொறியாளர்கள் சிக்கி இருப்பதால், அவர்களை மீட்பது கடினம் என ஒன்றிய அரசு மறைமுகமாக தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஒன்றிய வெளியுறவு அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘வேலைவாய்ப்புக்காக சுற்றுலா விசாவில் வெளிநாடுகளுக்கு பயணம் செய்வதற்கு முன், வேலை தருவதாக கூறியுள்ள வெளிநாட்டு முதலாளிகள், ஆட்சேர்ப்பு முகவர்களின் நற்சான்றிதழ்களை கட்டாயம் சரிபார்க்க வேண்டும். மியான்மரின் கயின் மாகாணத்தில் உள்ள மையவாடி பகுதி, முழுமையாக மியான்மர் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இல்லை. சில இன ஆயுதக் குழுக்கள் அதன் மீது ஆதிக்கம் செலுத்துகின்றன. மியான்மர் இந்திய தூதரகம் சமீபத்தில் 60 பேரில் 30 இந்தியர்களை மீட்டது,’ என்று கூறப்பட்டுள்ளது. இதன்மூலம், ஆயுத குழுக்களிடம் சிக்கியுள்ள இந்திய பொறியாளர்களை மீட்பது கடினம் என்பதை, வெளியுறவு அமைச்சகம் மறைமுகமாக தெரிவித்து இருப்பதாக கருதப்படுகிறது.
Tags:
Indian employee trapped in Myanmar government rescue difficult Ministry of External Affairs indirect report மியான்மரில் சிக்கி இந்திய ஊழியர் அரசு மீட்பது கடினம் வெளியுறவுத் துறை மறைமுக அறிக்கைமேலும் செய்திகள்
காஷ்மீர் பண்டிட்கள் பாதுகாப்பு குறித்து பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கடிதம்..!
வாணி ஜெயராம் மறைவு இசை உலகிற்கு பெரும் இழப்பாகும்: பிரதமர் மோடி இரங்கல்
தட்டுப்பாடின்றி பக்தர்களுக்கு லட்டு கிடைக்க நடவடிக்கை: தேவஸ்தான அதிகாரி தகவல்
சேலையால் கழுத்தை நெரித்து கணவனை கொன்ற மனைவி கைது
ஆக்கிரமிப்பை அகற்ற சென்ற காவல்துறையினர் மீது கற்களை வீசி தாக்குதல்: மத்தியப்பிரதேசத்தில் பரபரப்பு
சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு கர்நாடக பாஜக இணை பொறுப்பாளராக அண்ணாமலை நியமனம்: தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அறிவிப்பு
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!