லஞ்ச ஒழிப்புத்துறையில் இருந்து சவுக்கு சங்கர் டிஸ்மிஸ்: உத்தரவை வாங்க மறுத்ததால் அறையின் வெளியே ஒட்டிய போலீசார்
2022-09-25@ 00:37:27

கடலூர்: யூடியூபர் சவுக்கு சங்கர் லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு துறையில் பணியாற்றி வந்தார். இவர் கடந்த 2003ம் ஆண்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். அவருக்கு மாத ஊதியமாக ரூ.40000 வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சமீபத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் சவுக்கு சங்கர் ஆஜரானார். அப்போது அவருக்கு எப்படி ரூ.40 ஆயிரம் அரசு சம்பளம் வழங்கி வருகிறது என்றும், அவரை பணி நீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டது.
இதற்கிடையில் கடந்த வாரம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சவுக்கு சங்கருக்கு 6 மாதம் சிறை தண்டனை வழங்கப்பட்டது. இதையடுத்து அவர் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் சவுக்கு சங்கரை பணிநீக்கம் செய்து, லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபி கந்தசாமி உத்தரவிட்டார். இதற்கான நோட்டீசை, சிறையில் இருக்கும் அவருக்கு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், சிறை அதிகாரிகளுடன் சென்று வழங்கினர். ஆனால் அந்த நோட்டீசை வாங்க சவுக்கு சங்கர் மறுத்துவிட்டார். இதை தொடர்ந்து அந்த நோட்டீஸ் சிறையில் அவரது அறை வாசலில் ஒட்டப்பட்டது.
மேலும் செய்திகள்
வாணியம்படி அருகே தேசிய நெடுஞ்சாலை சுரங்கப்பாதையில் தேங்கி நிற்கும் தண்ணீர்: நடவடிக்கைக்கு பொதுமக்கள் கோரிக்கை
திருப்பத்தூர் அருகே ரூ.11 கோடியில் ஜவ்வாதுமலை-புதூர்நாடு சாலை பணி: மார்ச் இறுதிக்குள் முடியும் என கோட்ட பொறியாளர் தகவல்
சேலம்-நாமக்கல்லில் பிரசித்தி பெற்ற காளிப்பட்டி கந்தசுவாமி கோயிலில் நாளை தைப்பூசத்திருவிழா தேரோட்டம்
மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எதிரொலி: தொப்பூர் கணவாயில் விபத்து உயிரிழப்பு குறைந்தது
ஈரோட்டில் ஆதியோகி ரத யாத்திரை ஆயிரக்கணக்கான மக்கள் தரிசனம்
விடாமல் தொடரும் கனமழை: தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.!
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!