நன்னடத்தையால் மாநிலம் முழுவதும் சிறைக்கைதிகள் 75 பேர் விடுதலை
2022-09-25@ 00:32:09

சென்னை: தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் நன்னடத்தை காரணமாக ஆயுள் தண்டனை கைதிகள் விடுவிக்கப்படுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டும் முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி, சிறையில் உள்ள ஆயுள் தண்டனை சிறைவாசிகளில் 10 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை அனுபவித்தவர்களில் நன்னடத்தையின் காரணமாக விடுதலை செய்யப்படுகிறவர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டது. அதில், சென்னை புழல் சிறையில் 2 பெண் கைதிகள் உட்பட 15 பேர், வேலூரில் 2, கடலூரில் 5, சேலம் 1, கோவை, திருச்சியில் தலா 12, மதுரையில் 22, புதுக்கோட்டையில் 4, சென்னை புழல் மற்றும் திருச்சி பெண்கள் தனிச்சிறையில் தலா 2 என 75 பேரின் பட்டியல் தயாரிக்கப்பட்டது.
இந்தப் பட்டியலில் இருந்த 75 பேரும் விடுவிக்கப்ட்டனர். அவர்களை சிறைத்துறை டிஜிபி சுனில்குமார் சிங் வாழ்த்தி, வழியனுப்பி வைத்தார். சென்னை புழல் சிறையில் விடுதலை செய்யப்பட்டவர்களுக்கு மளிகை தொகுப்பு பொருட்கள், சிறையில் பணியாற்றியதற்கான ஊதியம் வழங்கப்பட்டது. சிறைத்துறை துணை தலைவர் முருகேசன், சிறை கண்காணிப்பாளர்கள் நிகிலா நாகேந்திரன், கிருஷ்ணராஜ் உள்ளிட்டோர் விடுதலையான கைதிகளை சிறையில் இருந்து வழியனுப்பி வைத்தனர். முன்விடுதலை செய்ய பரிந்துரைக்கப்பட்ட பிற கைதிகள் வரும் நாட்களில் படிப்படியாக விடுவிக்கப்படுவார்கள் என்று சிறைத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
உள்வாடகைக்கு விட்டதால் ரூ.20 கோடி மதிப்பு கோயில் கடைக்கு சீல்
கருத்துரிமையை பறிக்கும் ஒன்றிய பாஜ அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்
ரவுடிகள் செல்போனை பறித்ததால் 4 கார் கண்ணாடிகளை உடைத்த போதை ஆசாமி: பொதுமக்கள் அடித்து உதைத்தனர்
பர்னிச்சர் குடோனில் தீ விபத்து: 4 மணி நேரம் போராடி அணைப்பு
தனியார் பேருந்து மோதி இந்திரா காந்தி சிலை உடைந்ததால் பரபரப்பு
சொத்துவரி கட்டாத 6 கடைகளுக்கு சீல்
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!