பாஜ அலுவலகம், பிரமுகர் வீடுகளில் தாக்குதல் உள்துறை செயலாளர், டிஜிபியிடம் பாஜ நேரில் மனு
2022-09-25@ 00:28:57

சென்னை: பாஜ அலுவலகம், பாஜ பிரமுகர்கள் வீடுகளில் பெட்ரோல் வெடிகுண்டு வீச்சு சம்பவம் போன்ற சம்பவங்கள் நடந்து வருகிறது. இந்த சம்பவங்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி தமிழக பாஜ தலைவர் கே.அண்ணாமலை எழுதியுள்ள கடிதத்தை அக்கட்சியின் துணை தலைவர்கள் கரு.நாகராஜன், திருப்பதி நாராயணன், மாநில செயலாளர் கராத்தே தியாகராஜன், மாவட்ட தலைவர் காளிதாஸ், பொதுச்செயலாளர் சி.ராஜா ஆகியோர் அடங்கிய குழுவினர் சென்னை தலைமை செயலகத்தில் உள்துறை செயலாளர் பணிந்திர ரெட்டியிடம் வழங்கினர். இதேபோன்று டி.ஜி.பி. சைலேந்திரபாபுவிடமும் அளித்தனர்.
தொடர்ந்து கரு.நாகராஜன் அளித்த பேட்டியில், ‘பாஜ அலுவலகம், நிர்வாகிகள் வீடு, பாஜ ஆதரவான ஆர்.எஸ்.எஸ்.அமைப்பு நிர்வாகிகளின் வீடுகளில் பெட்ரோல் குண்டுகள் வீசப்படுகின்றன. இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. இந்த விவகாரத்தில் போலீஸ் டி.ஜி.பி. தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். பாஜ அலுவலகம், நிர்வாகிகள் இல்லம், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அலுவலகம், நிர்வாகிகள் இல்லங்களுக்கும் தக்க பாதுகாப்பு வழங்க அளிக்க வேண்டும். நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று டிஜிபி சொல்லி இருக்கிறார். பாஜ அலுவலகம், நிர்வாகிகளுக்கும் பாதுகாப்பு வழங்கப்படும் என்பதையும் அவர் உறுதி செய்திருக்கிறார்’என்றார்.
Tags:
BJP Office VIP House Attack Home Secretary DGP BJP in person petition பாஜ அலுவலகம் பிரமுகர் வீடு தாக்குதல் உள்துறை செயலாளர் டிஜிபி பாஜ நேரில் மனுமேலும் செய்திகள்
சென்னை-கோவை இடையே வந்தே பாரத் ரயில்: பொது மேலாளர் ஆர்.என்.சிங் தகவல்
வாணியம்பாடியில் நெரிசலில் சிக்கி இறந்த 4 பெண்கள் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் 8 ஏக்கரில் நவீன பூங்கா அமைக்கப்படும்: அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேட்டி
டெல்டா மாவட்ட பயிர் சேதங்களை ஆய்வு செய்ய 2 அமைச்சர்கள் அனுப்பிவைக்கப்படுகிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
சென்னையில் குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்ட சுமார் ரூ.19.29 கோடி தங்க நகைகள், 2.70 கோடி ரொக்கம் உரிமையாளர்களிடம் ஒப்படைப்பு
சென்னையில் கடந்த ஒரு வாரத்தில் 7 குற்றவாளிகள் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது: நடப்பாண்டில் இதுவரை 32 குற்றவாளிகள் கைது
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!