ரூ.167 கோடி போதை மாத்திரைகள் பறிமுதல்
2022-09-25@ 00:23:49

அய்சால்: மியான்மர் எல்லையில் ரூ.167.86 கோடி மதிப்புள்ள போதை மருந்து மாத்திரைகளை அசாம் ரைபிள்ஸ், மிசோரம் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். மியான்மர் எல்லையில் போதைப் பொருள் கடத்தப்படுவதாக வந்த தகவலை தொடர்ந்து, மிசோரம் போலீசாரும் அசாம் ரைபிள்ஸ் படையினரும் இணைந்து நேற்று முன்தினம் மியான்மர் எல்லை அருகே உள்ள சம்பாய் மாவட்டத்தின் மெல்பக் கிராமத்தில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, ஒரு வாகனத்தை நிறுத்தி வீரர்கள் சோதனை செய்தனர். அதில், 5 லட்சம் மெத்தபென்டமைன் என்ற போதை மருந்து மாத்திரைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தன. 55.80 கிலோ எடை கொண்ட இவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இவற்றின் சர்வதேச சந்தை மதிப்பு ரூ.167.86 கோடி. இது தொடர்பாக பெண் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மியான்மர் எல்லையில் கடந்த 3 ஆண்டுகளில் ரூ.200 கோடி மதிப்புள்ள இதுபோன்ற போதை மாத்திரகைள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. போதை விருந்துகளில் இந்த மாத்திரை பயன்படுத்தப்படுகிறது.
மேலும் செய்திகள்
சுப்ரீம் கோர்ட் அமர்வில் சிங்கப்பூர் தலைமை நீதிபதி
பிபிசி ஆவணப்படம் விவகாரம் ஒன்றிய அரசு பதிலளிக்க சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்
ஒபிஎஸ் தரப்பையும் உள்ளடக்கிய பொதுக்குழு கூட்டத்தை கூட்டி, வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட முடிவுகளை எடுக்கலாம்: அதிமுக பொதுக்குழு வழக்கில் உச்சநீதிமன்றம் உத்தரவு
விபத்தில் 2 இளைஞர்கள் கீழே விழுந்த நிலையில் தீப்பொறியுடன் பைக்கை 4 கி.மீ இழுத்து சென்ற கார்: சாலையில் சென்ற மக்கள் பீதி
சினிமா உலகில் தனக்கென தனி உலகத்தை உருவாக்கி கொண்டவர் கே.விஸ்வநாத்: பிரதமர் நரேந்திர மோடி புகழாரம்
கட்சி தலைமையிடம் அதிருப்தி ஏற்படுத்த சோனியாவுக்கு போலி கடிதம் எழுதுவது யார்? போலீசில் புகாரளிக்க உள்ளதாக மாஜி முதல்வர் ஆவேசம்
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!