என்ஐஏ சோதனையால் போராட்டம் சென்ட்ரலில் ரயில் பயணிகளிடம் சோதனை
2022-09-25@ 00:09:38

சென்னை: என்ஐஏ சோதனை காரணமாக, பல்வேறு பகுதிகளில் பெட்ரோல் குண்டு வீச்சு உள்ளிட்ட போராட்டங்கள் நடந்து வருவதால், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களாக என்ஐஏ அதிகாரிகள் பாப்புலர் ப்ரண்ட்ஸ் ஆப் இந்தியா மற்றும் எஸ்டிபிஐ கட்சி அலுவலகங்கள், தலைவர்களின் வீடுகளில் சோதனை நடத்தி வருகின்றனர். இதை கண்டித்து, பாஜவினர் வீடுகள், அலுவலகங்கள், கார் ஆகியவை தாக்கப்படுவது, பெட்ரோல் குண்டு வீசுவது என பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகின்றன.
இதன் எதிரொலியாக, எப்போதும் பரபரப்பாக காணப்படும் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பயணிகளுக்கு பாதுகாப்பு அளிக்கும் விதமாகவும், அசம்பாவிதங்கள் நடக்காமல் தடுக்கவும் சென்ட்ரல் ரயில்வே காவல் உதவி ஆணையர் முத்துக்குமார் மேற்பார்வையில், ஆய்வாளர் சசிகலா தலைமையில் போலீசார் சென்ட்ரல் ரயில் நிலைய நுழைவாயில், நடைமேடை 6 மற்றும் 8, 9 ஆகிய பகுதிகளில் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகளிடம் தீவிர சோதனை நடத்தப்படுகிறது. இதன் காரணமாக, சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
Tags:
NIA raid protest train passenger at Central raid என்ஐஏ சோதனை போராட்டம் சென்ட்ரலில் ரயில் பயணி சோதனைமேலும் செய்திகள்
ஒருங்கிணைந்த பொறியியல் சார்நிலை பணியில் நெடுஞ்சாலை, பொதுப்பணி துறையில் 1,083 காலியிடங்கள்: தேர்வுக்கு மார்ச் 4ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம், டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
கூட்டணி கட்சியின் உட்கட்சி பிரச்னையில் தலையிட மாட்டோம் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் எடப்பாடி வேட்பாளருக்கு ஆதரவு: பாஜ தலைவர் அண்ணாமலை பரபரப்பு பேட்டி
அதிமுக வேட்பாளராக தென்னரசு போட்டியிடுவார் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு தமிழ்மகன் உசேன் கடிதம்
அமெரிக்காவில் உயிரிழப்பு, பார்வை பறிபோன விவகாரம் சென்னை கண் சொட்டு மருந்து தயாரிப்பு நிறுவனத்தில் சோதனை: ஒன்றிய அரசு அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை
தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தான நிர்வாகத்தின் கீழ் செயல்படும் 88 கோயில்களின் செலவுக்காக ரூ.3 கோடி அரசு மானியம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
பொது வேட்பாளர் யார் என இதுவரை எடப்பாடி தரப்பு தெரிவிக்கவில்லை: ஓபிஎஸ் அணி குற்றச்சாட்டு
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!