தூத்துக்குடிக்கு கடத்தி வரப்பட்ட ரூ.1.75 கோடி போதை பொருள் சிக்கியது
2022-09-24@ 18:02:16

தூத்துக்குடி: மலேசியாவில் இருந்து தூத்துக்குடிக்கு கடத்தி வரப்பட்ட ரூ.1.75 கோடி மதிப்பிலான கசகசா பிடிபட்டது. பாப்பி சீட் எனப்படும் கசகசா மருத்துவதுறையில் உரிய அனுமதியுடன் மருந்துகள் தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது. இதனை துருக்கி, கிர்க்கிஸ்தான் உள்ளிட்ட 4 நாடுகளில் இருந்து மட்டுமே இந்தியாவிற்குள் இறக்குமதி செய்ய அனுமதி உள்ளது. இதற்கும் மத்திய பிரதேசம் மாவட்டம் குவாலியரில் உள்ள சிஎப்டிஏ என்ற மத்திய அரசு நிறுவனத்திடம் அனுமதி சான்றிதழ் பெறவேண்டும்.
ஆனால் இந்த பாப்பிசீட் போதை பொருள் தயாரிப்பதற்காக அவ்வப்போது கடத்தி வரப்படுகிறது. தூத்துக்குடிக்கும் இதுபோல பாப்பி சீட் கடத்தி வருவதாக மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து மலேசியாவில் இருந்து தூத்துக்குடிக்கு வந்த ஒரு கன்டெய்னர் மீது சந்தேகம் எழுந்தது. அந்த கன்டெய்னருக்காக சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களில் அது மதுரையில் உள்ள ஒரு நிறுவனத்திற்கு மலேசியாவில் இருந்து ஒயிட் சிமென்ட் இறக்குமதி செய்யப்பட்டிருந்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது.
இதனையடுத்து அதிகாரிகள் அந்த கன்டெய்னரை திறந்து சோதனையிட்டனர். அதில் முதலில் ஒயிட் சிமென்ட்டும் அதன் பின்புறம் ஈரம் புகாதவாறு பேக்கிங் செய்யப்பட்ட மூட்டைகளில் அனுமதியின்றி இறக்குமதி செய்யப்பட்ட போதை பொருளான பாப்பி சீட்டும் இருந்தது. இதனையடுத்து தலா 25 கிலோ எடையிலான 400 மூட்டைகளில் இருந்த 10 மெட்ரிக் டன் எடையிலான பாப்பி சீட் எனப்படும் ரா கசகசாவையும், 3 டன் எடையிலான ஒயிட் சிமென்டையும் பறிமுதல் செய்தனர்.
இதில் பறிமுதல் செய்யப்பட்ட பாப்பிசீட் மதிப்பு மட்டும் ரூ.1.75 கோடியாகும். இது குறித்து தூத்துக்குடியை சேர்ந்த ஷிப்பிங் நிறுவனம் மற்றும் மதுரையில் உள்ள இறக்குமதி நிறுவனத்தில் மத்திய வருவாய்புலனாய்வு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த ஆண்டு இறுதியில் ஆப்கானிஸ்தானில் இருந்து தூத்துக்குடிக்கு கடத்தி வரப்பட்ட 25 மெட்ரிக் டன் பாப்பி சீட் பிடிபட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள்
கொடைக்கானலுக்கு வரும் வெளியூர் வாகனங்களுக்கு சுங்கக்கட்டணம் உயர்ந்தது
ரூ.784 கோடியில் பள்ளி வகுப்பறைகள் கட்டும் பணி தொடக்கம் கல்வியும், மருத்துவமும் இரண்டு கண்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
குடிநீர் தொட்டியில் இன்ஜினியர் சடலம் மீட்பு அமைச்சர், டிஐஜி நேரில் விசாரணை
தாலி கட்டும் நேரத்தில் மணமகன் ஓட்டம் மண்டபத்துக்கு வந்தவர் மாப்பிள்ளை ஆனார்
விஐடி பல்கலையில் கலைஞர் மாணவர் விடுதி, பேர்ல் ஆராய்ச்சி கட்டிடம் திறப்பு தமிழகத்தில் மாபெரும் கல்வி புரட்சி: தனியார் கல்வி நிறுவனங்களும் பங்களிக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
திருப்பூரில் வட இந்தியர்கள் உள்ளூர் ஆட்களிடம் சண்டையில் ஈடுபட்டதாக சமூக வலைதளங்களில் பரவும் வீடியோவால் பரபரப்பு.!
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!