அழவும் இல்லை; உடல் அசைவும் இல்லை; வாய் மூலம் சுவாசிக்க வைத்து குழந்தை உயிரை காப்பாற்றிய டாக்டர்: சமூக வலைதளத்தில் வீடியோ வைரல்
2022-09-24@ 17:14:57

ஆக்ரா: பிறந்த குழந்தைக்கு வாய் மூலம் சுவாசிக்க வைத்து அந்த குழந்தையை காப்பாற்றிய உத்தரபிரதேச மருத்துவரை பலரும் பாராட்டி வருகின்றனர். உத்தரபிரதேச மாநிலம் ஆக்ரா அரசு மருத்துவமனையில் கர்ப்பிணி பெண்ணுக்கு ெபண் குழந்தை பிறந்தது. ஆனால் அந்த குழந்தை பிறந்தவுடன் பல நிமிடங்கள் ஆகியும் அழவில்லை; எவ்வித உடல் அசையுமின்றி இருந்தது. அதிர்ச்சியடைந்த மருத்துவ குழுவினர், அந்த குழந்தைக்கு ஆக்சிஜன் வசதியை ஏற்படுத்திக் கொடுத்தனர்.
இருந்தாலும் கூட அந்த குழந்தையானது அசையவில்லை. குழந்தை இறந்துவிட்டதாக எல்லோரும் நினைத்த நிலையில், அங்கிருந்த மருத்துவர் சுரேகா சவுத்ரி உடனடியாக அந்த குழந்தையின் வாய் வழியாக சுவாசிக்க வழிவகை செய்தார். தனது வாயின் மூலம் குழந்தையின் வாயில் காற்றை ஊதிவிட்டார். அதையடுத்து அந்த குழந்தை அதிர்ஷ்டவசமாக இயல்பாக சுவாசிக்க ஆரம்பித்தது. மேலும் உடலும் அசைந்தது. சிறிது நேரத்தில் அந்த குழந்தை அழவும் ஆரம்பித்தது. குழந்தையின் செய்கையை பார்த்து அனைவரும் மகிழ்ச்சியடைந்தனர்.
இதுகுறித்து மருத்துவர் சுரேகா சவுத்ரி கூறுகையில், ‘மூச்சுவிட முடியாமல் ஆபத்தான நிலையில் இருந்த பிறந்த குழந்தைக்கு, அவசர கால மருத்துவ உதவிகள் செய்யப்பட்டன. இருந்தும் குழந்தையின் உடலில் எவ்வித மாற்றமும் இல்லை. அதையடுத்து சுமார் 7 நிமிடங்கள் குழந்தையின் வாய் மூலம் சுவாசிக்க வைத்தேன். அதனால் குழந்தையின் உடல் அசைய ஆரம்பித்து; உயிரும் பிழைத்தது’ என்று மகிழ்ச்சியுடன் கூறினார். இதுதொடர்பான வீடியோ தற்போது வைரலாகும் நிலையில், இந்த சம்பவம் எப்போது நடந்தது என்பது குறித்து குறிப்பிடப்படவில்லை.
Tags:
அழவும் இல்லை; உடல் அசைவும் இல்லை குழந்தை உயிரை காப்பாற்றிய டாக்டர் சமூக வலைதளத்தில் வீடியோ வைரல்மேலும் செய்திகள்
ரூ38 கோடி மோசடி வழக்கில் தெலுங்கு நடிகர் கைது: ஐதராபாத் போலீஸ் அதிரடி
ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி சென்றார்
பாலிவுட் நட்சத்திர காதல் ஜோடி கியாரா, சித்தார்த் திடீர் திருமணம்
'கட்சிகளிடம் ஒற்றுமையில்லாததால் 2019ல் மீண்டும் பாஜக ஆட்சி': மாநிலங்களவையில் பாஜக அரசை உப்புமாவுடன் ஒப்பிட்டு விமர்சித்த திருச்சி சிவா..!!
இளம் விஞ்ஞானிகளை உருவாக்கும் நோக்கில் ஸ்ரீகாளஹஸ்தியில் மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி
வருடாந்திர பிரமோற்சவத்தையொட்டி கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி கோயிலில் ஆழ்வார் திருமஞ்சனம்-4 மணிநேரம் தரிசனம் ரத்து
பெருநாட்டில் பயங்கர நிலச்சரிவு : 36 பேர் உயிரிழப்பு..!
துருக்கியில் அடுத்தடுத்து 5 நிலநடுக்கங்கள்..வீதிகள் எங்கும் மரண ஓலம்... 6,000ஐ எட்டும் பலி எண்ணிக்கை!!
உச்ச கட்டத்தை எட்டியது புத்தாண்டு கொண்டாட்டம்: சீனாவில் களைகட்டிய விளக்கு திருவிழா..!!
சீனாவில் வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து: 16 பேர் உயிரிழப்பு
துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 1,300-ஐ தாண்டியது..!!