கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வாலிபருக்கு 133 நாள் சிறை
2022-09-24@ 15:19:50

காஞ்சிபுரம்: கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுவந்த வாலிபருக்கு 133 நாட்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட போலீஸ் எஸ்பி சுதாகர் உத்தரவிட்டார். இதன்படி, விஷ்ணுகாஞ்சி காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்ட சின்ன காஞ்சிபுரம், சுக்லாபாளையம் கிராமத்தை சேர்ந்த டிராவிட் (எ) மந்தம் (29) என்பவரை கைது செய்தனர்.
இதையடுத்து ஒரு வருடம் நன்னடத்தையில் இருக்கும்படி காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியர் மூலம் உத்தரவிடப்பட்டது. இந்த நிலையில், கஞ்சா விற்பனை உள்பட பல்வேறு குற்றச் செயல்களில் டிராவிட் தொடர்ந்து ஈடுபட்டுவந்தார். இதனால் நன்னடத்தை விதிமுறைகள் மீறியதாக டிராவிட்டை 133 நாட்கள் சிறையில் அடைக்க காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியர் ராஜலட்சுமி உத்தரவிட்டார். இதையடுத்து டிராவிட்டை மீண்டும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும் செய்திகள்
புதுச்சேரியில் அமெரிக்க பெண் பலாத்காரம்
திருமண மண்டபத்தில் நகை திருடிய பெண் கைது
ஏட்டு மனைவியுடன் தவறான உறவு இந்து மக்கள் கட்சி நிர்வாகி கொலை: 8 பேர் கைது
ரூ.2 கோடி மதிப்பு நிலத்திற்கு போலி ஆவணம் தயாரித்த முதியவர் அதிரடி கைது
ரூ.24 லட்சம் திருடிய காவலாளி கைது
டிவிட்டரில் நடிகை காயத்ரி ரகுராம் குறித்து ஆபாச பதிவு ராணிப்பேட்டை மாஜி பாஜ மாவட்ட நிர்வாகி மீது வழக்கு: கைது செய்ய சென்னை சைபர் க்ரைம் போலீஸ் தீவிரம்
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!