ஆவடி அருகே ஒன்றிய அரசு ஊழியர் வீட்டில் 40 பவுன், பணம் கொள்ளை
2022-09-24@ 15:14:40

ஆவடி: ஆவடி அருகே ஒன்றிய அரசு ஊழியர் வீட்டில் 40 பவுன் மற்றும் 50 ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆவடி அடுத்த கோவில்பதாகை அசோக் நகர் பகுதியை சேர்ந்தவர் சிவகுமார் (50). அதே பகுதியில் உள்ள ஒன்றிய அரசின் தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறார். இவருக்கு மனைவி, 2 பிள்ளைகள் உள்ளனர். நேற்றிரவு சென்னை மூலக்கடையில் உள்ள தனது மாமியார் வீட்டுக்கு குடும்பத்துடன் சென்றார் சிவக்குமார்.
இன்று அதிகாலையில் அனைவரும் வீடு திரும்பினர். அப்போது, பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. இதை பார்த்ததும் சிவகுமார் மற்றும் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த 40 பவுன் நகைகள், ரூ.50 ஆயிரம் ரொக்கப்பணம் கொள்ளை போனது தெரியவந்தது. இதுகுறித்து ஆவடி டேங்க் பேக்டரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் வழக்குப்பதிவு செய்து கொள்ளை கும்பலை தேடி வருகின்றனர். மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்தும் குற்றவாளிகளை தேடுகின்றனர். இச்சம்பவம் ஆவடி அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகள்
தபால் நிலையத்தில் பணம் கொள்ளை
கிளப்பில் பணம் வைத்து சூதாடிய 35 பேர் கைது
கஞ்சா விற்றவருக்கு 5 ஆண்டு சிறை
சவ ஊர்வலத்தில் சேவல் சண்டை விடுவதை தடுத்த பெண் சப்-இன்ஸ்பெக்டர் காவலருக்கு அடி உதை: போதை ஆசாமிகள் கைது
காரைக்கால் அருகே பயங்கரம் குழந்தை, பாட்டியை கொன்று இளம்பெண் தற்கொலை முயற்சி: தாய், தந்தை, 2 சகோதரர்களுக்கும் வெட்டு
பாமக பிரமுகர் ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை: 2வது மனைவியின் மகன் வெறிச்செயல்
மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற செல்லப் பிராணிகள் திருவிழா: லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள Pet Fed நிகழ்ச்சி
பிரான்ஸ் அரசின் ஓய்வூதிய சீர்திருத்தக் கொள்கைக்கு எதிர்ப்பு: அதிபர் மேக்ரான் அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்..!!
பெரிய அரங்குகள், நூலகங்கள், நவீன வசதிகள்: புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் மாதிரி புகைப்படங்கள் வெளியீடு..!!
தமிழ்நாடு பெயரை மாற்றுமாறு கூறிய ஆளுநர் ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து காங். கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!!
உக்ரைனில் ஹெலிகாப்டர் விழுந்து நொருங்கியதில் உள்துறை அமைச்சர் உட்பட 16 பேர் உயிரிழப்பு..!!