8 மாணவிகளுக்கு தொல்லை 16 வயது சிறுவன் கைது: பள்ளி விழிப்புணர்வில் பயன்
2022-09-24@ 14:30:29

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் அருகே பெள்ளாதி பகுதியில் 8 பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 16 வயது சிறுவனை காரமடை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள பெள்ளாதியை சேர்ந்த 10 வயது சிறுமி அங்குள்ள பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வருகிறார்.
பள்ளியில் பாலியல் தொல்லை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அப்போது இந்த மாணவி தங்கள் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுவன் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆசிரியரிடம் தெரிவித்தார். மேலும் கொரோனா காலத்தில் வீட்டிற்கு வந்து தொடர் தொல்லை கொடுத்ததாகவும் கூறினார். மாணவி கூறியதையடுத்து மேலும் 7 மாணவிகள் அதே நபர் தங்களுக்கும் பாலியல் தொல்லை கொடுத்தார் என்று ஆசிரியரிடம் தெரிவித்தனர்.
இதை கேட்டு அதிர்ச்சியடைந்த ஆசிரியர் இது குறித்து காரமடை போலீசில் புகார் செய்தார். வழக்குப்பதிவு செய்த போலீசார் சிறுவனிடம் விசாரணை நடத்தினர். அப்போது 8 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானது. இதையடுத்து அவரை போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேட்டுப்பாளையத்தில் 16 வயது சிறுவன் 8 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து கைதான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகள்
கும்மிடிப்பூண்டி அருகே அதிமுக பெண் கவுன்சிலரை கடத்திய வழக்கில் 4 பேர் கைது
பார்ட்டிக்கு அழைத்து சென்று மதுவை ஊற்றிக் கொடுத்து 13 வயது சிறுமி பலாத்காரம்: நண்பர்கள் இருவர் கைது
விமான நிலையத்தில் ரூ.95 லட்சம் தங்கம் பறிமுதல்
போலி நகைகளை அடகு வைத்து ரூ.1.84 லட்சம் அபேஸ் செய்தவர் கைது: முக்கிய குற்றவாளிக்கு வலை
வாடிக்கையாளர் போல் நடித்து பியூட்டி பார்லரில் திருடிய பெண் கைது
செல்போன் பறித்த 2 பேர் கைது
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!
மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற செல்லப் பிராணிகள் திருவிழா: லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள Pet Fed நிகழ்ச்சி
பிரான்ஸ் அரசின் ஓய்வூதிய சீர்திருத்தக் கொள்கைக்கு எதிர்ப்பு: அதிபர் மேக்ரான் அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்..!!
பெரிய அரங்குகள், நூலகங்கள், நவீன வசதிகள்: புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் மாதிரி புகைப்படங்கள் வெளியீடு..!!
தமிழ்நாடு பெயரை மாற்றுமாறு கூறிய ஆளுநர் ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து காங். கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!!