கோலாலம்பூரில் இருந்து வந்த தலைமறைவு குற்றவாளி சென்னையில் கைது
2022-09-24@ 14:22:38

மீனம்பாக்கம்: அரியானா மாநிலத்தை சேர்ந்தவர் மன்பிரீத்சிங் (30). இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது. பல இடங்களில் தேடியும், கடந்த 6 மாதங்களாக தலைமறைவாக இருந்தார். இதைத் தொடர்ந்து, அவரை தேடப்படும் குற்றவாளியாக அரியானா போலீசார் அறிவித்தனர். மேலும், அனைத்து முக்கிய விமான நிலையங்களிலும் தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து நேற்று சென்னை சர்வதேச விமானநிலையத்துக்கு பயணிகள் விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளின் பாஸ்போர்ட் ஆவணங்களை குடியுரிமை அதிகாரிகள் சோதித்தனர். அதில், அரியானா மாநிலத்தை சேர்ந்த ஒருவர் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரது பாஸ்போர்ட்டை பரிசோதித்தபோது, அரியானா மாநில போலீசாரால் தேடப்படும் தலைமறைவு குற்றவாளி மன்பிரீத்சிங் என தெரியவந்தது.
அவரை மடக்கி பிடித்து, விமானநிலைய போலீசில் ஒப்படைத்தனர். பின்னர் அரியானா மாநில போலீசாருக்கு அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். அவர்கள் சென்னைக்கு விரைந்துள்ளனர்.
மேலும் செய்திகள்
போலீஸ் அதிகாரி எனக்கூறி கொண்டு 6 பெண்களை திருமணம் செய்த ‘கில்லாடி’ கைது: 7வது முயற்சியின் போது போலீசில் சிக்கினார்
சென்னை புறநகர் பகுதிகளில் தொடர் திருட்டில் ஈடுபட்ட இருவர் சிறையிலடைப்பு
வேலை வாங்கி தருவதாக விமானத்தில் அழைத்து வந்து நட்சத்திர ஓட்டலில் தங்க வைத்து இளம் பெண்களை ரு1 லட்சத்திற்கு விற்பனை செய்த பாலியல் புரோக்கர் கைது
கலெக்டரின் தந்தையை தாக்கி நகை கொள்ளை
அவிநாசி அருகே ஆடம்பர வாழ்க்கைக்காக தொழிலதிபர்களை மயக்கிய கல்யாண ராணி கைது: 3வது கணவரை விஷ ஊசி போட்டு கொல்ல முயன்றபோது சிக்கினார்
வேறு நபருடன் நிச்சயம் செய்ததால் ஆத்திரம் ஓடும் ஆட்டோவில் காதலியின் கழுத்தை அறுத்த காதலன் கைது: காதலுக்காக கப்பல் வேலையை துறந்தவர் கம்பி எண்ணுகிறார்
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!