கடம்பத்துார் திரவுபதி அம்மன் கோயிலில் நவராத்திரி விழா: 26ம் தேதி முதல் அக்.4 ம் தேதி வரை நடைபெற உள்ளது
2022-09-24@ 02:36:06

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூரில் உள்ள திரவுபதி அம்மன் கோயிலில் நவராத்திரி பெருவிழா வரும் 26ம் தேதி தொடங்கி 9 நாட்கள் நடைபெற உள்ளது. நவராத்திரி பெருவிழாவை முன்னிட்டு 9 நாட்களும் அம்மன் பல்வேறு அலங்காரத்திலும் மூலவர் பல்வேறு காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அதன்படி வருகின்ற 26ம் தேதி ஆதி பராசக்தி மஞ்சள் காப்பு நிகழ்ச்சியும், 27ம் தேதி மீனாட்சி குங்குமம் காப்பும், 28 ந் தேதி ராஜேஸ்வரிக்கு சிகப்பு குங்குமம் காப்பு நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.
அதே போல் 29 ந் தேதி மகாலட்சுமி சந்தனகாப்பும், 30ம் தேதி மாவடி பச்சை குங்கும காப்பும், அக்டோபர் 1ம் தேதி சரஸ்வதி மாவு காப்பும், 2ம் தேதி அன்னபூரணி ரோஸ் குங்குமம் காப்பும், 3ம் தேதி இரத சாரதிக்கு வெள்ளி கவசம் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. விழாவின் கடைசி நாளான மகிஷாசூரமர்தினிக்கு மஞ்சள் காப்பு நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து அக்டோபர் 5ம் தேதி விஜயதசமி திருவிழாவை முன்னிட்டு அன்று காலை 9 மணியளவில் சிறப்பு அபிேஷகமும், ஆராதனையும் , வருகின்ற அக்டோபர் 9 ம் தேதி அம்மன் அலங்காரம் விடையாத்தி - சந்தனகாப்பு நிகழ்ச்சியும் நடைபெறும் என கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் செய்திகள்
கடந்த 7 நாட்களில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் தொடர்பான சிறப்பு சோதனையில், 9 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 16 குற்றவாளிகள் கைது
சொத்துவரி நிலுவையில் வைத்துள்ள சொத்து உரிமையாளர்கள் சொத்துவரியினை உடனடியாக செலுத்த வேண்டும்: சென்னை மாநகராட்சி எச்சரிக்கை
‘சங்கிலி மற்றும் செல்போன் பறிப்பு குற்றவாளிகளிடம் நன்னடத்தை பிணை ஆவணம் பெற ஆயத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது: காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால்
சென்னை செனாய்நகரில் உள்ள அம்மா அரங்கத்தில் பொதுமக்களின் அனைத்து குடும்ப சுப நிகழ்ச்சிகள், மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி: சென்னை மாநகராட்சி
சென்னை விமான நிலையத்தில் ரூ.1.15 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்
சென்னை மெட்ரோ இரயில் திட்டம் கட்டம்-2-ல் வழித்தடம் 4-ல் மின்சாரம் மற்றும் பராமரிப்பு பணிகளுக்கு ரூ.134.9 கோடி மதிப்பில் ஒப்பந்தம்
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!