ஊத்துக்கோட்டை அம்பேத்கர் நகரில் புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் கட்ட வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை
2022-09-24@ 02:06:12

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை அம்பேத்கர் நகரில் புதிய அங்கன்வாடி மையக்கட்டிடம் கட்டித்தரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். ஊத்துக்கோட்டை பேரூராட்சி அம்பேத்கர் நகரில் 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டிய அங்கன்வாடி மையம் உள்ளது. இதில் அதே பகுதியை சேர்ந்த 25க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வந்தனர். இவர்கள் படிக்கும் அங்கன்வாடிமைய கட்டிடம் மிகவும் பழுதடைந்து, மேற்கூரைகள் சேதமடைந்தும், கட்டிடம் விரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும் அதில் செடி கொடிகள் மற்றும் மரங்கள் படர்ந்துள்ளது. இதை சுற்றியும் புதர்கள் மண்டிக்கிடக்கிறது.
இந்நிலையில் அங்கன்வாடிமையம் தற்போது அதே பகுதியில் உள்ள மகளிர் சுய உதவிக்குழு கட்டிடத்தில் இயங்கி வருகிறது. மேலும் பழைய கட்டிடத்தின் அருகிலேயே அரசு நடுநிலைப்பள்ளியும் உள்ளது. இந்த பழுதடைந்த அங்கன்வாடி மையத்தில் இருந்து பாம்பு, தேள் உள்ளிட்ட விஷப்பூச்சிகள் நடுநிலைப்பள்ளிகளுக்குள் செல்கிறது. எனவே பயன்படாமல் உள்ள அங்கன்வாடி மையத்தை அகற்றவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதுகுறித்து பெற்றோர்கள் கூறியதாவது; ஊத்துக்கோட்டை அம்பேத்கர் நகரில் உள்ள அங்கன்வாடி மையக்கட்டிடம் பழுதடைந்து பயன்படாமல் உள்ளது. இதனால் அருகில் உள்ள மகளிர்குழு கட்டிடத்தில் கடந்த 5 வருடமாக மாணவர்கள் படித்து வருகிறார்கள். எனவே பழுடைந்த அங்கன்வாடி மையத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடத்தரவேண்டும் என கூறினர்.
*அங்கன்வாடிமையம் தற்போது அதே பகுதியில் உள்ள மகளிர் சுய உதவிக்குழு கட்டிடத்தில் இயங்கி வருகிறது
மேலும் செய்திகள்
ஆவினில் காலி பணியிடங்கள் இனி டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்பப்படும்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு
மாநில அளவிலான வனத்தீ மேலாண்மை குறித்த கருத்துப் பட்டறை
அதிமுக ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட ஆயிரம் விளக்கு பகுதி காவலர் குடியிருப்புக்கு ஆபத்து?.. சமூக வலைத்தளங்களில் வீடியோ பரவியதால் பரபரப்பு
ஒன்றிய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் ஓபிசி கிரீமிலேயர் வரம்பு போதுமானது என்பதா?: ரூ.15 லட்சமாக உயர்த்த ராமதாஸ் வலியுறுத்தல்..!!
பூந்தமல்லியில் மெட்ரோ ரயில் நிலைய 2ம் கட்ட பணி; வாகன பார்க்கிங் அமைக்க கடைகளை அகற்ற முடிவு: வியாபாரிகள் எதிர்ப்பு
தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு துணைத்தலைவர், உறுப்பினர்களை நியமிக்க ஒன்றிய அரசுக்கு அன்புமணி கோரிக்கை!!
பெருநாட்டில் பயங்கர நிலச்சரிவு : 36 பேர் உயிரிழப்பு..!
துருக்கியில் அடுத்தடுத்து 5 நிலநடுக்கங்கள்..வீதிகள் எங்கும் மரண ஓலம்... 6,000ஐ எட்டும் பலி எண்ணிக்கை!!
உச்ச கட்டத்தை எட்டியது புத்தாண்டு கொண்டாட்டம்: சீனாவில் களைகட்டிய விளக்கு திருவிழா..!!
சீனாவில் வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து: 16 பேர் உயிரிழப்பு
துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 1,300-ஐ தாண்டியது..!!