கொரியா ஓபன் டென்னிஸ்: அரையிறுதியில் ரடுகானு
2022-09-24@ 00:21:55

சியோல்: கொரியா ஓபன் டென்னிஸ் போட்டியின் அரையிறுதியில் விளையாட இங்கிலாந்து வீராங்கனை எம்மா ரடுகானு தகுதி பெற்றுள்ளார். காலிறுதியில் போலந்தின் மாக்தா லினெட்டுடன் (30 வயது, 51வது ரேங்க்) மோதிய ரடுகானு (19 வயது, 77வது ரேங்க்) 6-2, 6-2 என நேர் செட்களில் மிக எளிதாக வென்று அரையிறுதிக்கு முன்னேறினார். இப்போட்டி 1 மணி, 17 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது.
மற்றொரு காலிறுதியில் லாத்வியா வீராங்கனை ஜெலனா ஆஸ்டபென்கோ (25 வயது, 19வது ரேங்க்) 6-2, 6-1 என்ற நேர் செட்களில் விக்டோரியா கசின்ட்சேவாவை (அண்டோரா, 17 வயது, 186வது ரேங்க்) வீழ்த்தினார். டட்டியான மரியா (ஜெர்மனி), எகடரினா அலெக்சாண்ட்ரோவா (ரஷ்யா) ஆகியோரும் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளனர். அரையிறுதியில் ஆஸ்டபென்கோ - ரடுகானு, மரியா - அலெக்சாண்ட்ரோவா மோதுகின்றனர்.
மேலும் செய்திகள்
சில்லி பாயின்ட்...
தாய்லாந்து ஓபன் டென்னிஸ் அரையிறுதிக்கு முன்னேறினார் வாங் ஸின்யு
ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: அரையிறுதியில் கர்நாடகா
ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: போராடி வென்றது மத்திய பிரதேசம்; பெங்கால் அணியும் தகுதி
சில்லி பாயின்ட்...
ரஞ்சி கோப்பை காலிறுதி 93 ரன்னில் சுருண்டது ஆந்திரா: ம.பி.க்கு வெற்றி வாய்ப்பு
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!