மழைக்காலம் தொடங்கும் முன்பே கோடியக்கரை சரணாலயத்தில் குவியும் வெளிநாட்டு பறவைகள்: சிறகடிக்கும் ரம்மியமான காட்சி..!!
2022-09-23@ 16:50:19

நாகை: மழைக்காலம் தொடங்கும் முன்பே கோடியக்கரை சரணாலயத்தில் ஏராளமான பறவைகள் குவிந்து வருகின்றன. நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை பறவைகள் சரணாலயத்திற்கு ஆண்டுதோறும் அக்டோபர் முதல் மார்ச் வரையிலான காலங்களில் லட்சக்கணக்கான வெளிநாட்டு பறவைகள் வந்து செல்வது வழக்கம். ரஷ்யா, ஆர்டிக் கிழக்கு ஐரோப்பா, மேற்காசிய நாடுகள், சீனா, ஈரான், இலங்கை, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான மையில்கள் கடந்து வரும் பறவைகள், இங்கு இளைப்பாறி செல்கின்றன.
நடப்பாண்டில் சீசன் தொடங்கும் முன்பாகவே கூனே கெடா, பூ நாரை, கடல் ஆலா உள்ளிட்ட ஏராளமான பறவைகள் சரணாலயத்திற்கு வர தொடங்கியுள்ளன. சரணாலயத்தில் கூட்டம் கூட்டமாக பறவைகள் சிறகடித்து பறப்பது பார்ப்பதற்கே கண்கொள்ளா காட்சியாக அமைந்துள்ளது. இரட்டை தீவு, கோவை தீவு, நெடுந்தீவு உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகள் பறவைகளை கண்டு ரசிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இன்னும் ஒருசில நாட்களில் பல்வேறு நாடுகளில் இருந்து லட்சக்கணக்கான பறவைகள் சரணாலயத்திற்கு வருகை தரும் என வன சரக அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் செய்திகள்
ஐஐடி உள்ளிட்ட ஒன்றிய உயர்கல்வி நிறுவனங்களில் 5 ஆண்டில் 61 பேர் தற்கொலை: மதுரை எம்பி கேள்விக்கு ஒன்றிய அமைச்சர் அதிர்ச்சி பதில்
பாதிரியார் மீது 2 வாரத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் ஆபாச வீடியோ பரப்பியவர்களுக்கு வலை: குமரி எஸ்.பி பரபரப்பு பேட்டி
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கோலாகலம்யுகாதி பண்டிகை கொண்டாட்டம்: ஷோபகிருத ஆண்டு பஞ்சாங்கம் படித்து காண்பித்த அர்ச்சகர்கள்
பட்டாசு ஆலை விபத்தில் பெண் பலி
ரயிலில் பாய்ந்து ஆசிரியை தற்கொலை
ஈரோடு மாநகராட்சி கமிஷனர் வீட்டில் ரெய்டு பல்லாவரம் நகராட்சியில் நடந்த முறைகேடு ஆவணங்கள் சிக்கியது
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி
டோக்கியோ, வாஷிங்டன், பெய்ஜிங்கில் செர்ரி மலரும் பருவம் தொடக்கம்..!!
பாக்தாத் சர்வதேச மலர் திருவிழாவின் மனதை கொள்ளை கொள்ளும் படங்கள்!!
சோமாலியாவில் நிலவும் பஞ்சம்: கடந்த ஆண்டு மட்டுமே 43,000 பேர் உயிரிழப்பு
ஆஸ்திரேலியாவின் டார்லிங் ஆற்றில் திடீர் வெப்பநிலை மாற்றத்தால் லட்சக்கணக்கான மீன்கள் உயிரிழப்பு..!!