பரம்பிக்குளம் அணை: நீர்மட்டம் 40 அடியாக குறைந்தால் மட்டுமே பராமரிப்பு தொடங்கும்; அதிகாரிகள் தகவல்
2022-09-23@ 14:38:21

கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே தமிழ்நாடு, கேரளா எல்லையில் உள்ள பரம்பிக்குளம் அணையின் மதகு உடைந்ததால் 3-வது நாளாக தண்ணீர் வெளியேறி வருகிறது. கோவை திருப்பூர் மாவட்டங்களில் பாசன மற்றும் குடிநீர் ஆதாரமாக விளங்கும் பரம்பிக்குளம் அணை 72 அடி உயரம் கொண்டது. 17 TMC நீரை தேக்கிவைக்கும் கொள்ளளவை கொண்ட அணை அண்மையில் பெய்த தென்மேற்கு பருவ மழையால் முழுமையாக நிரம்பியது. இந்நிலையில், 3 மதகுகள் கொண்ட நடு மதகில் உடைப்பு ஏற்பட்டவே மூன்றாவது நாளாக அணையில் இருந்து தண்ணீர் வெளியேறி அரபிக்கடலில் கலக்கிறது.
இதனால், வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடி நீர் வெளியேறி வருவதால் இன்று காலை நிலவரப்படி அணையின் நீர் மட்டம் 61 அடியாக குறைந்துள்ளது. அணையின் நீர்மட்டம் 40 அடியாக குறைந்தால் மட்டுமே பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள முடியும் என்பதால், முதற்கட்டமாக அணை மதகு மற்றும் சேதமடைந்த பாகங்களை சீரமைப்பதற்கு திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு வருகிறது. பின்னர், அரசிடம் இருந்து நிதி பெற்று புதிய மதகு பொருத்தும் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே, சென்னையில் இருந்து 5 பேர் கொண்ட அணை கட்டுமான நிபுணர் குழு 2 நாட்களாக முகாமிட்டு ஆய்வு மேற்கொண்டு வரும் நிலையில், மேலும் சில தொழில் நுட்ப பிரிவு நிபுணர்கள் சென்னையில் இருந்து செல்ல உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் செய்திகள்
இடைத்தேர்தல் சோதனை கெடுபிடிகள் பணம் கொண்டு செல்லும் வியாபாரிகளுக்கு ரசீது: உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துவரப்பட்ட ரூ. 1.74 லட்சம் பறிமுதல்
பனி பாதி... மேகம் மீதி.... கொடைக்கானலில் பகலிலும் கும்மிருட்டு: வாகன ஓட்டிகள் சிரமம்
தாராபுரம் அருகே மீண்டும் பரபரப்பு அமராவதி ஆற்றில் ராட்சத முதலை நடமாட்டம்
புதுச்சேரியில் பெண்கள் போலீசார் இடையே தள்ளு முள்ளு
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் இருந்து திருச்செந்தூருக்கு அணிவகுத்து செல்லும் பாதயாத்திரை பக்தர்கள்: பிப்.5ம் தேதி தைப்பூச திருவிழா
கைத்திறமையால் காசாகும் கழிவுப் பொருட்கள் வெளிநாடு செல்லும் பெண் கைவினை கலைஞர்களின் தயாரிப்புகள்: நெல்லை அருகே சத்தமின்றி சாதிக்கும் மகளிர்கள்
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!