கம்பம்-கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் கொட்டப்படும் காய்கறி கழிவுகளால் துர்நாற்றம்-நடவடிக்கை எடுக்க கோரிக்கை
2022-09-23@ 14:15:11

கூடலூர் : கம்பம்-கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் காய்கறி கழிவுகள் கொட்டபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது. தேனியில் தொடங்கி கம்பம், கூடலூர், குமுளி தேசிய நெடுஞ்சாலை 220 தமிழகத்தையும் கேரளத்தையும் இணைக்கும் முக்கிய சாலையாக உள்ளது. இந்த சாலை தேசிய நெடுஞ்சாலை துறை பராமரிப்பில் உள்ளது. இதில் கம்பம் குமுளி நெடுஞ்சாலையில், கம்பம், கூடலூர் பகுதியில் உள்ள காய்கறி மொத்தவியாபார கடைகளில் மீதமாகும் மற்றும் அழுகிய காய்கறிகளை, கடை உரிமையாளர்கள் வேலையாட்கள் மூலம் இரவுநேரங்களில் நெடுஞ்சாலை ஓரங்களில் கொட்டி விடுகின்றனர்.
இதனால் அப்பகுதிகளில் துர்நாற்றம் வீசுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு கம்பம் கூடலூர் ரோட்டில் அப்பாச்சி பண்ணை அருகே சிலர் அழுகிய பல்லாரி வெங்காயத்தை கொட்டிச் சென்றுள்ளனர். குப்பைகளை மக்கும், மக்காத குப்பை என தரம்பிரித்து வாங்கிச்செல்ல நகராட்சி தூய்மைப் பணியாளர்கள் இருந்தும், இப்படி நெடுஞ்சாலை ஓரங்களில் கழிவு காய்கறிகளை கொட்டுபவர்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் செய்திகள்
ஈரோடு கிழக்கு தொகுதியில் சூடுபிடித்த தேர்தல் பிரச்சாரம்!: இஸ்திரி, தேநீர் போட்டுக் கொடுத்து அதிமுக வேட்பாளருக்கு ஆதரவு திரட்டிய ஆர்.பி.உதயகுமார்..!!
சாலை, கழிவுநீர் கால்வாய் அமைக்க வலியுறுத்தி ஊத்துக்கோட்டை பேரூராட்சி ஆபீசை முற்றுகையிட்ட மக்கள்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: காங்., அதிமுக, தேமுதிக வேட்பாளர் உள்பட 80 வேட்புமனுக்கள் ஏற்பு..!!
உத்திரமேரூர் களியாம்பூண்டி அருகே “நான் வந்துட்டேன்’’... பிறந்த குழந்தை பேசியதா?.. வதந்தியால் திடீர் பரபரப்பு
நாமக்கலில் ரேசன் கடைகளுக்கு பொருட்களை எடுத்துச் செல்லும் வாடகை லாரிகளுக்கான டெண்டர் ரத்து
பள்ளிப்பட்டு 13வது வார்டில் பிரதான சாலையில் கழிவுநீர் தேக்கம்: நோய்தொற்று பரவும் அபாயம்
பெருநாட்டில் பயங்கர நிலச்சரிவு : 36 பேர் உயிரிழப்பு..!
துருக்கியில் அடுத்தடுத்து 5 நிலநடுக்கங்கள்..வீதிகள் எங்கும் மரண ஓலம்... 6,000ஐ எட்டும் பலி எண்ணிக்கை!!
உச்ச கட்டத்தை எட்டியது புத்தாண்டு கொண்டாட்டம்: சீனாவில் களைகட்டிய விளக்கு திருவிழா..!!
சீனாவில் வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து: 16 பேர் உயிரிழப்பு
துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 1,300-ஐ தாண்டியது..!!