அதிமுக ஆட்சி திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்த ஓபிஎஸ் வீட்டில்தான் சோதனை நடத்த வேண்டும்: மாஜி அமைச்சர் உதயக்குமார் பாய்ச்சல்
2022-09-23@ 00:19:29

உசிலம்பட்டி: மதுரை மாவட்டம், உசிலம்பட்டி முருகன் கோயில் முன்பு அதிமுக சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் உதயக்குமார் அளித்த பேட்டி: அதிமுக தொண்டர்கள் என்ற போர்வையில் குண்டர்களை கூட்டிக் கொண்டு அதிமுக அலுவலகத்தை துவம்சம் செய்த ஓ.பன்னீர்செல்வம் எத்தனை முறை காசிக்கு சென்றாலும் பாவம் தீராது. அதிமுக தொண்டர்கள் யார் பக்கம் என்று அவருக்கு தெரியும். அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் நடத்தப்படும் சோதனை பற்றிய கேள்விக்கு அவர்கள் குற்றமற்றவர்கள் என நிரூபிக்கட்டும் என ஓபிஎஸ் கூறியுள்ளார். ஆனால் அதிமுக ஆட்சியில் அனைத்து திட்டத்திற்கும் நிதியமைச்சராக இருந்து ஒப்புதல் அளித்து கையொப்பமிட்ட உங்கள் வீட்டில்தான் சோதனை நடத்த வேண்டும் என்றார்.
Tags:
AIADMK rule approval OPS test former minister Udayakumar அதிமுக ஆட்சி ஒப்புதல் ஓபிஎஸ் சோதனை மாஜி அமைச்சர் உதயக்குமார்மேலும் செய்திகள்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளராக தென்னரசு அறிவிப்பு: பாஜகவை கழற்றிவிட்ட எடப்பாடி பழனிசாமி?
சொல்லிட்டாங்க...
ஜனாதிபதியின் உரைக்கு ஏ.சி.சண்முகம் பாராட்டு
நீதிபதி ரோகிணி ஆணையம் பதவிக்காலம் நீட்டிப்பு: பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம்
தோழமை அடிப்படையில் அனைவரிடமும் பேச்சுவார்த்தை நடக்கிறது லேட்டா வந்தாலும் லேட்டஸ்டாக வருவோம்... மாஜி அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி
2 யூடியூப் சேனல்கள் மீது சரத்குமார் புகார்
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!