அரசமைப்பு சட்டத்தை பாதுகாக்கும் வகையில் காங்கிரசார் 25ம் தேதி நடைபயணம்
2022-09-23@ 00:18:59

சென்னை: அரசமைப்பு சட்டத்தை பாதுகாக்கும் வகையில், காங்கிரசார் மேற்கொள்ளும் நடைபயணத்தை வரும் 25ம் தேதி கே.எஸ்.அழகிரி தொடங்கி வைக்கிறார். இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: இந்திய அரசமைப்புச் சட்டத்தின்படி பாதுகாப்பு வழங்கப்பட்ட தலித்துகள், சிறுபான்மையினர், பின்தங்கிய சமுதாயத்தினர் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறார்கள். குறிப்பாக, உ.பி.யில் அடக்குமுறைக்கு ஆளாகி பலரது உயிர்கள் பறிக்கப்பட்டிருக்கிறது. 19 வயது தலித் பெண் காவல்துறையினரால் பலவந்தமாக பலாத்காரம் செய்யப்பட்டு உயிரோடு எரிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளாகியும் நீதி கிடைக்கவில்லை.
எனவே, இந்திய அரசமைப்புச் சட்டத்தை பாதுகாக்க நடைபயணம் வருகிற 25ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணியளவில் சென்னை, சத்தியமூர்த்தி பவனில் தொடங்கி வைக்கிறேன். இந்நிகழ்வில், முன்னாள் ஒன்றிய அமைச்சர்கள் சிதம்பரம், திக்விஜய் சிங், சல்மான் குர்ஷித், ஜெய்ராம் ரமேஷ், அகில இந்திய காங்கிரஸ் முன்னணி அமைப்புகளின் ஒருங்கிணைப்பாளர் ராஜூ மற்றும் அந்த அமைப்புகளின் தேசிய தலைவர்கள், அகில இந்திய காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சிரிவெல்ல பிரசாத், சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வப்பெருந்தகை ஆகியோர் பங்கேற்கிறார்கள்.
Tags:
Constitution Act protecting Congress 25th walk அரசமைப்பு சட்டம் பாதுகாக்கும் காங்கிரசார் 25ம் தேதி நடைபயணம்மேலும் செய்திகள்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: ஓபிஎஸ் அணி வேட்பாளர், வேட்பு மனுவுடன் இரட்டை இலை சின்னம் கேட்டு மனு..!
ஓபிஎஸ், சசிகலா சந்திப்பு? அதிமுக ஒன்றிணைவதற்கான காலம் நெருங்கி வருகிறது: சசிகலா பரபரப்பு பேட்டி
என்னுடைய மகன் திருமகன் ஈவெரா விட்டுச் சென்ற பணியை தொடருவேன்: வேட்புமனுவை தாக்கல் செய்த பின் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேட்டி
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாஜக ஆதரவு யாருக்கு?.. இபிஎஸ், ஓபிஎஸ் உடன் அடுத்தடுத்து அண்ணாமலை சந்திப்பு
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை எடப்பாடி பழனிசாமியுடன் சந்திப்பு
பட்ஜெட் ஏமாற்றம் அளிக்கிறது: பொன்குமார் அறிக்கை
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!