முதல்வரை அவதூறாக சித்தரித்து போஸ்டர் ஒட்டிய தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை உதவியாளர் கைது: வேறு யாருக்கும் தொடர்புள்ளதா என போலீசார் விசாரணை
2022-09-23@ 00:18:52

சென்னை: தமிழக முதல்வரை அவதூறாக சித்தரித்து போஸ்டர் ஒட்டிய தமிழக பாஜ தலைவர் அண்ணாமலையின் உதவியாளர் கைது செய்யப்பட்டுள்ளார். வட சென்னை பகுதியில் கடந்த 11ம் தேதி, பல்வேறு தெருக்களில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை அவதூறாக சித்தரிக்கும் வகையில் போலி பத்திரிகை பெயரில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. இது தொடர்பாக சென்னை மாநகராட்சி 5வது மண்டல உதவி பொறியாளர் ராஜ்குமார், பிலிப்ராஜ் என்பவரை பிடித்து விசாரணை நடத்தி, எச்சரித்து அனுப்பி உள்ளார். எனினும் பிலிப்ராஜ் அதே பணியை தொடர்ந்து செய்ததால், எஸ்பிளனேட் காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்துள்ளார். துறைமுகம் திமுக கிழக்குப் பகுதி செயலாளர் ராஜசேகர் என்பவரும் புகார் அளித்துள்ளார்.
அதன் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து அவதூறு போஸ்டர் ஒட்டிய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த பிலிப்ராஜை கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலின்படி, இந்து ஜனநாயக முன்னணியின் சென்னை மாநகரச் செயலாளர் சத்தியநாதன் தான் போஸ்டர்களை கொடுத்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து சத்தியநாதனையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனையடுத்து கைது செய்யப்பட்ட சத்தியநாதனிடம் விசாரணை மேற்கொண்டதில் பறையர் பேரியக்க தலைவர் சிவகுருநாதன் என்பவர் போஸ்டர்களை சென்னையில் ஒட்ட கொடுத்தது தெரியவந்துள்ளது.
போஸ்டரை ஒட்ட கொடுத்த சிவகுருநாதனையும் போலீசார் கைது செய்தனர். முதல்வரை அவதூறாக சித்தரித்து சிவகாசியில் தனியார் அச்சகத்தில் 5,000 போஸ்டர்களை சிவகுருநாதன் அச்சடித்து கொரியர் மூலம் சென்னை கொண்டு வந்து, வழக்கறிஞர்கள் இருவர் மூலம் சத்தியநாதன் மற்றும் பிலிப்ராஜ் ஆகியோரை வைத்து சென்னையில் சுவரொட்டிகளை ஒட்டியது விசாரணையில் தெரியவந்தது. இதுபோன்று அவதூறாக சித்தரித்து சுவரொட்டிகளை ஒட்டுமாறு கூறிய நபர் யார் என கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணை மேற்கொண்டபோது, தமிழக பாஜ தலைவர் அண்ணாமலையின் உதவியாளர் கிருஷ்ணகுமார் முருகன் என்ற அதிர்ச்சி தகவல் வெளியானது.
குறிப்பாக தனியார் பத்திரிகையில் தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை பற்றி கார்ட்டூன் சித்திரம் வெளியானது போல், கிருஷ்ணகுமார் முருகன் தமிழக முதல்வரையும் பற்றி அவதூறு பரப்பும் வகையில் வாசகம் மற்றும் கார்ட்டூன்களை சித்தரித்து சிவகுருநாதனுக்கு அனுப்பியது விசாரணையில் தெரியவந்தது. இதற்காக 35 ஆயிரம் ரூபாய் பணத்தையும் சிவகுருநாதனுக்கு கொடுத்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த வழக்கில் ஏற்கனவே சிவகுருநாதன், சத்தியநாதன், பிலிப் ராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்ட நிலையில் தலைமறைவாக இருந்த பாஜ ஆதரவாளரும், தமிழக பாஜ தலைவர் அண்ணாமலையின் உதவியாளருமான கிருஷ்ணகுமார் முருகனை போலீசார் நேற்று கைது செய்தனர். கிருஷ்ணகுமார் முருகனை அடையாறில் அவர் நடத்திவரும் அரசியல் ஆராய்ச்சி மையம் என்ற நிறுவனத்தில் வைத்து போலீசார் கைது செய்தனர். தமிழக முதல்வரை அவதூறாக சித்தரித்து சுவரொட்டி ஒட்டப்பட்ட விவகாரத்தில் இன்னும் வேறு யாருக்கும் தொடர்புள்ளதா என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:
Poster defames Chief Minister Tamil Nadu BJP president Annamalai aide arrested முதல்வரை அவதூறாக சித்தரித்து போஸ்டர் தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை உதவியாளர் கைதுமேலும் செய்திகள்
கும்மிடிப்பூண்டி அருகே அதிமுக பெண் கவுன்சிலரை கடத்திய வழக்கில் 4 பேர் கைது
பார்ட்டிக்கு அழைத்து சென்று மதுவை ஊற்றிக் கொடுத்து 13 வயது சிறுமி பலாத்காரம்: நண்பர்கள் இருவர் கைது
விமான நிலையத்தில் ரூ.95 லட்சம் தங்கம் பறிமுதல்
போலி நகைகளை அடகு வைத்து ரூ.1.84 லட்சம் அபேஸ் செய்தவர் கைது: முக்கிய குற்றவாளிக்கு வலை
வாடிக்கையாளர் போல் நடித்து பியூட்டி பார்லரில் திருடிய பெண் கைது
செல்போன் பறித்த 2 பேர் கைது
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!
மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற செல்லப் பிராணிகள் திருவிழா: லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள Pet Fed நிகழ்ச்சி
பிரான்ஸ் அரசின் ஓய்வூதிய சீர்திருத்தக் கொள்கைக்கு எதிர்ப்பு: அதிபர் மேக்ரான் அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்..!!
பெரிய அரங்குகள், நூலகங்கள், நவீன வசதிகள்: புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் மாதிரி புகைப்படங்கள் வெளியீடு..!!
தமிழ்நாடு பெயரை மாற்றுமாறு கூறிய ஆளுநர் ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து காங். கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!!