சிதம்பரத்தில் 14 வயது சிறுமியை திருமணம் செய்த நடராஜர் கோவில் தீட்சிதர் கைது: போலீசார் அதிரடி
2022-09-22@ 15:38:50

கடலூர்: சிதம்பரத்தில் 14 வயது சிறுமியை திருமணம் செய்த நடராஜர் கோவில் தீட்சிதரையும், திருமணம் செய்துவைத்த தீட்சிதரையும் போலீசார் கைது செய்துள்ளனர். சிதம்பரம் வடக்கு வீதியை சேர்ந்த நடராஜர் கோவில் தீட்சிதரான சோமசேகர், தனது 14 வயது மகளுக்கு குழந்தை திருமணம் செய்து வைத்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமியிடம் கடலூர் மாவட்ட சமூக நல அலுவலர், சித்ரா தலைமையிலான அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். அப்போது நடராஜர் கோவில் தீட்சிதருடன் சிறுமிக்கு திருமணமானது உறுதியானது.
இதுகுறித்து சமூகநலத்துறையின் மகளிர் நல அலுவலர் அளித்த புகாரின் பேரில் சிறுமிக்கு திருமணம் செய்து வைத்த அவரது தந்தை சோமசேகர், திருமணம் செய்துகொண்ட தீட்சிதர் பசுபதி மற்றும் அவரது தந்தை கணபதி ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் கடலூர் மாவட்ட போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் செய்திகள்
கோவையில் ரூ10.82 லட்சம் மதிப்புள்ள 157 கிலோ கஞ்சா சாக்லேட் சிக்கியது: வட மாநில வியாபாரி கைது
ஐடி நிறுவனங்களில் வேலை தருவதாக கூறி நட்சத்திர ஓட்டலில் தங்க வைத்து இளம்பெண்களை ரூ.1 லட்சத்திற்கு விற்ற பாலியல் புரோக்கர் அதிரடி கைது: 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு
சவுகார்பேட்டையில் அதிகாலை பரபரப்பு சம்பவம் ஆந்திர நகை வியாபாரிகளிடம் ரூ.1.40 கோடி கொள்ளை: போலீஸ் எனக்கூறி காரில் வந்து கைவரிசை
ஆபாச வீடியோவை வாட்ஸ்அப்பில் பரப்பி விடுவோம் என சிறைக்கு சென்று வந்தவர்களிடம் ரூ.3 லட்சம் கேட்டு மிரட்டிய 2 பேர் கைது: பாஜ நிர்வாகி என கூறி மோசடிக்கு முயற்சி
திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் விலை உயர்ந்த கேமரா திருடிய 2 பேர் கைது
முன் விரோத தகராறில் வாலிபரை வெட்டி கொல்ல முயற்சி: 7 பேர் கைது
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!