சென்னை விமான நிலையத்தில் துபாய்க்கு கடத்த முயன்ற வெளிநாட்டு பணம் பறிமுதல்: 2 பேர் கைது
2022-09-22@ 14:42:24

மீனம்பாக்கம்: சென்னை சர்வதேச விமானநிலையத்தில் இருந்து நேற்றிரவு துபாய் செல்லும் விமானத்தில் பயணம் செய்ய வேண்டிய 2 பயணிகளிடம் இருந்து ரூ.37.39 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 2 பேரையும் கைது செய்து விசாரிக்கின்றனர். சென்னையில் இருந்து துபாய் செல்லும் ஏர்இந்தியா விமானம் நேற்றிரவு சென்னை சர்வதேச விமான நிலையத்தில் தயார்நிலையில் நின்றிருந்தது. அதில் செல்லவேண்டிய பயணிகளின் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் பரிசோதித்து, அவர்களை விமானத்துக்கு அனுப்பும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது சென்னையை சேர்ந்த சையத் இப்ராஹிம் (30), அக்பர் (26) என்ற 2 பயணிகளின்மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர்களின் உடைமைகளை சோதனை செய்தபோது எதுவும் கிடைக்கவில்லை. இதனால் இருவரையும் தனியறைக்கு கொண்டு சென்று அதிகாரிகள் சோதனை செய்தனர். இதில், அவர்கள் இருவரும் உள்ளாடைக்குள் மறைத்து வைத்து ஏராளமான வெளிநாட்டு கரன்சி நோட்டுகள் கடத்தி செல்லப்படுவது தெரியவந்தது.
அந்த நோட்டுகளை சுங்கத்துறை அதிகாரிகள் எண்ணி பார்த்தபோது, ரூ.37.39 லட்சம் மதிப்பிலான அமெரிக்க டாலர் மற்றும் யூரோ கரன்சிகள் எனத் தெரியவந்தது. அந்த வெளிநாட்டு பணத்தை பறிமுதல் செய்தனர். அவர்களின் துபாய் பயணத்தை ரத்து செய்து, இருவரையும் சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்து விசாரிக்கின்றனர்.
மேலும் செய்திகள்
ஐடி நிறுவனங்களில் வேலை தருவதாக கூறி நட்சத்திர ஓட்டலில் தங்க வைத்து இளம்பெண்களை ரூ.1 லட்சத்திற்கு விற்ற பாலியல் புரோக்கர் அதிரடி கைது: 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு
சவுகார்பேட்டையில் அதிகாலை பரபரப்பு சம்பவம் ஆந்திர நகை வியாபாரிகளிடம் ரூ.1.40 கோடி கொள்ளை: போலீஸ் எனக்கூறி காரில் வந்து கைவரிசை
ஆபாச வீடியோவை வாட்ஸ்அப்பில் பரப்பி விடுவோம் என சிறைக்கு சென்று வந்தவர்களிடம் ரூ.3 லட்சம் கேட்டு மிரட்டிய 2 பேர் கைது: பாஜ நிர்வாகி என கூறி மோசடிக்கு முயற்சி
திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் விலை உயர்ந்த கேமரா திருடிய 2 பேர் கைது
முன் விரோத தகராறில் வாலிபரை வெட்டி கொல்ல முயற்சி: 7 பேர் கைது
புறநகர் பகுதிகளில் தொடர் திருட்டு 2 பேர் சிக்கினர்
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!