நன்னடத்தை பிணையை மீறிய 2 ரவுடிகளுக்கு 363 நாள் சிறை: துணை கமிஷனர் உத்தரவு
2022-09-21@ 03:38:13

சென்னை: நன்னடத்தை பிணையை மீறி பெண் ஒருவரை கொலை செய்ய முயன்ற 2 ரவுடிகளை 363 நாட்கள் சிறை தண்டனை வழங்கி தி.நகர் துணை கமிஷனர் உத்தரவிட்டுள்ளார். தேனாம்பேட்டை கார்பரேஷன் காலனியை சேர்ந்தவர் கவுதம் (எ) குண்டு கவுதம் (24). இவர் மீது கொலை, கொலை முயற்சி உட்பட 6 வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதேபோல், பள்ளிக்கரணை நாராயணபுரம் ஐஐடி காலனியை சேர்ந்த சதீஷ் (எ) தீஞ்ச சதீஷ் (25) மீது வழிப்பறி உட்பட 3 வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்த ஜூலை 19ம் தேதி ரவுடிகள் கவுதம் மற்றும் சதீஷ் ஆகியோர் தி.நகர் துணை கமிஷனர் ஆதர்ஷ் பச்சேரா முன்பு ஆஜராகி, ஒரு வருட காலத்திற்கு எந்த குற்றச்செயல்களிலும் ஈடுபடமாட்டோம், என்று நன்னடத்தை உறுதி மொழி பிணை பத்திரம் எழுதி கொடுத்தனர்.
ஆனால் அதை மீறி கடந்த ஜூலை 25ம் தேதி கஞ்சா விற்பனை செய்த குற்றத்திற்காகவும், கடந்த 6ம் தேதி பெண் ஒருவரை தாக்கி காலை செய்ய முயன்ற குற்றத்திற்காகவும் ரவுடிகள் கவுதம் மற்றும் சதீஷ் ஆகியோரை தேனாம்பேட்டை போலீசார் கைது செய்தனர். நன்னடத்தை பிணை பத்திர உறுதி மொழியை மீறி குற்றச்செயல்களில் ஈடுபட்ட ரவுடிகளான கவுதம் மற்றும் சதீஷை தேனாம்பேட்டை போலீசார் செயல்முறை நடுவராகிய தி.நகர் துணை கமிஷனர் ஆதர்ஷ் பச்சேரா முன்பு ஆஜர்படுத்தினர். அப்போது 2 ரவுடிகளுக்கும் நன்னடத்த பிணை நாட்களை கழித்து கவுதமுக்கு 358 நாட்களும், சதீசுக்கு 363 நாட்களும் பிணையில் வெளியே வர முடியாத சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார். அதைதொடர்ந்து போலீசார் 2 ரவுடிகளையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும் செய்திகள்
ஆவினில் காலி பணியிடங்கள் இனி டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்பப்படும்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு
மாநில அளவிலான வனத்தீ மேலாண்மை குறித்த கருத்துப் பட்டறை
அதிமுக ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட ஆயிரம் விளக்கு பகுதி காவலர் குடியிருப்புக்கு ஆபத்து?.. சமூக வலைத்தளங்களில் வீடியோ பரவியதால் பரபரப்பு
ஒன்றிய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் ஓபிசி கிரீமிலேயர் வரம்பு போதுமானது என்பதா?: ரூ.15 லட்சமாக உயர்த்த ராமதாஸ் வலியுறுத்தல்..!!
பூந்தமல்லியில் மெட்ரோ ரயில் நிலைய 2ம் கட்ட பணி; வாகன பார்க்கிங் அமைக்க கடைகளை அகற்ற முடிவு: வியாபாரிகள் எதிர்ப்பு
தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு துணைத்தலைவர், உறுப்பினர்களை நியமிக்க ஒன்றிய அரசுக்கு அன்புமணி கோரிக்கை!!
பெருநாட்டில் பயங்கர நிலச்சரிவு : 36 பேர் உயிரிழப்பு..!
துருக்கியில் அடுத்தடுத்து 5 நிலநடுக்கங்கள்..வீதிகள் எங்கும் மரண ஓலம்... 6,000ஐ எட்டும் பலி எண்ணிக்கை!!
உச்ச கட்டத்தை எட்டியது புத்தாண்டு கொண்டாட்டம்: சீனாவில் களைகட்டிய விளக்கு திருவிழா..!!
சீனாவில் வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து: 16 பேர் உயிரிழப்பு
துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 1,300-ஐ தாண்டியது..!!