மின் கட்டண உயர்வு: உச்ச நீதிமன்றத்தில் 23ல் விசாரணை
2022-09-21@ 00:17:36

புதுடெல்லி: மின் கட்டண உயர்வு விவகாரம் தொடர்பாக தமிழக அரசின் கேவியட் மற்றும் தமிழ்நாடு நூற்பாலைகள் சங்கங்கள் தரப்பின் மேல்முறையீட்டு ஆகியவற்றை உச்ச நீதிமன்றம் நாளை மறு நாள் விசாரிக்க உள்ளது. தமிழகத்தில் மின்கட்டண உயர்வு தொடர்பாக முடிவெடுக்க தடை விதிக்க வேண்டும் என தமிழ்நாடு நூற்பாலைகள் சங்கங்கள் தரப்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை தனிநீதிபதி அமர்வு, ‘‘தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையத்தில் சட்டத்துறையை சேர்த்தவர் கண்டிப்பாக இருக்க வேண்டும்.
அவரை நியமிக்கும் மின் கட்டண உயர்வு கோரிக்கை மனு மீது இறுதி உத்தரவு பிறப்பிக்கக்கூடாது. அதே நேரத்தில் கருத்து கேட்பு கூட்டம் நடத்தலாம்’’ என உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில், தனிநீதிபதி உத்தரவுக்கு தடை விதிக்கப்பட்டு, இந்த விவகாரம் தொடர்பாக வெளியிடப்பட்ட தமிழக அரசாணை செல்லும் என பல்வேறு கோரிக்கைகள் கொண்ட உத்தரவை உயர்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வு கடந்த மாதம் உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில் மேற்கண்ட விவகாரம் தொடர்பாக தமிழக அரசு தொடர்ந்த கேவியட் மனு மற்றும் தமிழ்நாடு நூற்பாலைகள் சங்கங்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மேல்முறையீட்டு மனு ஆகிய அனைத்தும் நாளை மறுநாள், உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் ஜே.கே.மகேஸ்வரி ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வர உள்ளது.
மேலும் செய்திகள்
அதானி விவகாரம் தொடர்பாக ஏற்பட்ட அமளியால் நாடாளுமன்றம் திங்கள் வரை ஒத்திவைப்பு
இடைத்தேர்தலை அறிவிக்க 6 மாதம் அவகாசம் இருந்த போதிலும் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு அவசர அவசரமாக அறிவித்தது ஏன்?: அதிமுக மாஜி அமைச்சர் சி.வி.சண்முகம் கேள்வி
பிபிசி ஆவணப்பட வழக்கு மத்திய அரசு பதில் அளிக்க: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
பொதுக்குழு தொடர்பான ஆவணங்களை ஏற்குமாறு தேர்தல் ஆணையத்திடம் சி.வி.சண்முகம் வலியுறுத்தல்
அதானி விவகாரம் குறித்து பிப்ரவரி 6ம் தேதி நாடு முழுவதும் போராட்டம்: காங்கிரஸ் அறிவிப்பு
அதானி விவகாரம்: எதிர்கட்சிகளின் அமளி காரணமாக 2வது நாடாளுமன்ற இரு அவைகளும் முடங்கியது..!
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!