விமான பயணத்தின் போது பஞ்சாப் முதல்வர் மான் போதையில் இருந்தாரா?.. ஒன்றிய அரசு விசாரணை
2022-09-21@ 00:11:54

புதுடெல்லி: பஞ்சாப் முதல்வர் பக்வந்த் மான் முதலீடுகளை ஈர்ப்பதற்காக 8 நாட்கள் அரசு முறை பயணமாக கடந்த 11ம் தேதி ஜெர்மனி புறப்பட்டு சென்றார். இந்நிலையில் நேற்று முன்தினம் இவர் ஜெர்மனியில் இருந்து நாடு திரும்ப இருந்தார். அப்போது, பிராங்பர்ட் விமான நிலையத்தில் டெல்லி செல்லும் விமானத்தில் இருந்து முதல்வர் பக்வந்த் இறக்கவிடப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. ஷிரோமணி அகாலி தளத்தின் தலைவர் சுக்பிர் சிங் பாதல், ‘‘முதல்வர் பக்வந்த் மான் மது அருந்தி இருந்ததால் பிராங்பர்ட் விமான நிலையத்தில் லுப்தான்சா விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்டார்” என்று நேற்று முன்தினம் புகார் எழுப்பினார்.
இந்த குற்றச்சாட்டை ஆம் ஆத்மி ஆதாரமற்றது என்று மறுத்துள்ளது. இந்நிலையில் இந்த குற்றச்சாட்டு தொடர்பாக பேட்டி அளித்த ஒன்றிய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா கூறுகையில், ‘‘சம்பவம் வெளிநாட்டில் நடந்தது என்பதால், பஞ்சாப் முதல்வர் இறக்கிவிடப்பட்டதாக கூறப்படும் புகாரின் உண்மை தன்மை குறித்து ஆய்வு செய்யப்படும்’’ என கூறி உள்ளார்.
மேலும் செய்திகள்
தட்டுப்பாடின்றி பக்தர்களுக்கு லட்டு கிடைக்க நடவடிக்கை: தேவஸ்தான அதிகாரி தகவல்
சேலையால் கழுத்தை நெரித்து கணவனை கொன்ற மனைவி கைது
ஆக்கிரமிப்பை அகற்ற சென்ற காவல்துறையினர் மீது கற்களை வீசி தாக்குதல்: மத்தியப்பிரதேசத்தில் பரபரப்பு
சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு கர்நாடக பாஜக இணை பொறுப்பாளராக அண்ணாமலை நியமனம்: தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அறிவிப்பு
அடிதடி வழக்கில் இருந்து மகனை விடுவிப்பதாக கூறி தாய்க்கு செக்ஸ் டார்ச்சர்: சப் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்
அழகு சாதன கிரீம் பூசிய 3 பெண்களுக்கு சிறுநீரக பாதிப்பு: மும்பையில் சோகம்
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!