புதுக்கோட்டை மீனவர்கள் 8 பேர் துப்பாக்கி முனையில் சிறைபிடிப்பு: இலங்கை கடற்படை அட்டூழியம்
2022-09-21@ 00:01:38

புதுக்கோட்டை: புதுக்கோட்டையை சேர்ந்த 8 மீனவர்களை, இலங்கை கடற்படையினர் துப்பாக்கி முனையில் சிறைபிடித்தனர். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அடுத்த ஜெகதாப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 87 விசைப்படகுகளில் மீனவர்கள் நேற்றுமுன்தினம் காலை கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். இதில் தமிழ்ச்செல்வன் (37) என்பவர் தனது விசைப்படகில், அதே பகுதியை சேர்ந்த விஜி(28), தினேஷ்(26), ரஞ்சித்(27), பக்கிரிசாமி(45), கமல்(25), புனுகு (41), கார்த்திக்(27) ஆகியோருடன் மீன் பிடிக்க கடலுக்கு சென்றார். இந்நிலையில் நேற்று அதிகாலை நெடுந்தீவு பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்தபோது அவ்வழியாக கப்பலில் ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி விசைப்படகை சுற்றிவளைத்து, 8 மீனவர்களையும் துப்பாக்கி முனையில் சிறைபிடித்தனர். இதில் பறிமுதல் செய்யப்பட்ட விசைப்படகுடன், 8 பேரையும் இலங்கை கடற்படையினர் காரை கடற்படை தளத்துக்கு அழைத்து சென்றனர். இந்த சம்பவம் ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:
Pudukottai fishermen 8 men gunpoint capture Sri Lanka Navy புதுக்கோட்டை மீனவர்கள் 8 பேர் துப்பாக்கி முனை சிறைபிடிப்பு இலங்கை கடற்படைமேலும் செய்திகள்
கல்லூரி மாணவி தீக்குளித்து சாவு: போனில் பேசியவருக்கு வலை
திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம்
மாநில அரசு கோரிக்கை வைத்தால் சுற்றுலா மேம்பாட்டு திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படும்: ஒன்றிய அமைச்சர் தகவல்
அரக்கோணம் அருகே கத்தியால் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற விஏஓ
புதுவையிலும் மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்க உத்தரவு
பக்தர்கள் ‘அரோகரா’ கோஷம் முழங்க பழநியில் தைப்பூச திருவிழா தேரோட்டம் கோலாகலம்: பல லட்சம் பக்தர்கள் பங்கேற்பு
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!