வாலாஜாபாத் ஒன்றியத்தில் ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு துவக்கம்
2022-09-20@ 04:01:00

வாலாஜாபாத்: வாலாஜாபாத் ஒன்றியத்தில் 61 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சியில் உள்ள தலைவர்கள் ஒன்று சேர்ந்து வாலாஜாபாத் ஒன்றிய ஊராட்சி மன்ற தலைவர்களின் கூட்டமைப்பு ஒன்றை நேற்று துவக்கினர். இக்கூட்டமைப்பின் தலைவராக தேவரியம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் அஜய்குமார், செயலாளர் காரை ஊராட்சி மன்ற தலைவர் வள்ளியம்மாள் செல்வம், பொருளாளராக பூசிவாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் லெனின்குமார், துணை தலைவராக பழையசீவரம் மகாலட்சுமி நீலமேகம், துணை செயலாளர்களாக புதுப்பாக்கம் மஞ்சுளா, புத்தகரம் நந்தகுமார், அகரம் சோபா யோகானந்தம் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
மேலும், இணை செயலராக அய்யம்பேட்டை எம்மிஸ்ரளா கூட்டமைப்பின் கௌரவ தலைவராக வாரணவாசி பிரேமா மோகனசுந்தரம், ஆலோசகராக முத்தியால்பேட்டை அன்பழகன், செயற்குழு உறுப்பினர்களாக கலியனூர் வடிவுக்கரசி ஆறுமுகம், ஒழையூர் குமரகுரு, கூத்திரம்பாக்கம் பிரியா, ஆட்டுப்புத்தூர் சுபத்ரா, புரிசை சரஸ்வதி, கொட்டவாக்கம் சந்திரிகா, கட்டவாக்கம் அஞ்சலம், தொள்ளாழி சுல்தான் ஹசீனா பேகம், கீழ்ஒட்டிவாக்கம் மகேந்திர வர்மன், கிதிரிப்பேட்டை பொன்மொழி, தாங்கி சிவலிங்கம், புளியம்பாக்கம் பாலச்சந்தர் ஆகியோரும் தேர்வாகினர். மேலும், கூட்டமைப்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து நிர்வாகிகளுக்கும் வாலாஜாபாத் ஒன்றிய பெருந்தலைவர் தேவேந்திரன், துணை தலைவர் சேகர் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.
மேலும் செய்திகள்
மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வழங்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
உயிர் நீத்த காவல் துறையினருக்கு இறுதி மரியாதை தொடர்பாக அனைத்து மாவட்ட காவல்துறையினருக்கு டிஜிபி சைலேந்திரபாபு சுற்றறிக்கை.!
வேட்பாளர் ஒப்புதலுக்கான சுற்றறிக்கை படிவம் இன்று வழங்கப்படும் என அறிவிப்பு: உச்சநீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து இபிஎஸ் அணி நடவடிக்கை!
தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
கன மழை காரணமாக நெற்பயிர் பாதித்த உழவர்களுக்கு உரிய இழப்பீடு அன்புமணி வலியுறுத்தல்
அண்ணா நினைவுநாளையொட்டி இபிஎஸ், ஓபிஎஸ் மரியாதை
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!