தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத்திற்காக நிலம் எடுக்கப்பட்டதால் மாற்று இடம் வழங்க வேண்டும்: கலெக்டரிடம் குடியிருப்புவாசிகள் மனு
2022-09-20@ 03:51:14

காஞ்சிபுரம்: விஆர்பி சத்திரம் கிராமத்தில் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத்திற்காக நிலம் எடுக்கப்பட்டதால் மாற்று இடம் வழங்க வேண்டும் என குடியிருப்பு வாசிகள், மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் வட்டம் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சிக்குட்பட்ட 11வது வார்டு விஆர்பி சத்திரம் கிராமத்தில் கடந்த 50 ஆண்டு காலமாக 100க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இதில், சுமார் 60க்கும் மேற்பட்ட வீடுகள் சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத்தால் பாதிக்கப்படுகிறது. பாதிக்கப்பட்ட குடியிருப்பு வாசிகளுக்கு வேறு எந்த நிலங்களும் இல்லாத காரணத்தால் தற்போது இவர்களது வாழ்வாதாரம் கேள்விக்குறியான நிலையில் உள்ளது.
மேற்படி இடத்தை எடுக்கும் பட்சத்தில் தங்களுக்கு அதே பகுதியில் உள்ள வேறு இடத்தில் மாற்று இடம் வழங்க கோரி காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டரிடம் நேற்று அப்பகுதி குடியிருப்புவாசிகள் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு அளித்தனர். தற்போது, இதனால் பள்ளிகள் படிப்பு தடைபடக்கூடாது, தொழில் சார்ந்த வேலைகள் பாதிப்பட கூடாது என்ற நிலையில் மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுத்து எங்களுக்கு வாழ்வாதாரம் அளிக்க வேண்டும் என்றும் உரிய மாற்று இடம் வழங்க வேண்டும் என்றும் அந்த மனுவில் கூறி உள்ளனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் தெரிவித்தார்.
மேலும் செய்திகள்
ஒருங்கிணைந்த பொறியியல் சார்நிலை பணியில் நெடுஞ்சாலை, பொதுப்பணி துறையில் 1,083 காலியிடங்கள்: தேர்வுக்கு மார்ச் 4ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம், டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
கூட்டணி கட்சியின் உட்கட்சி பிரச்னையில் தலையிட மாட்டோம் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் எடப்பாடி வேட்பாளருக்கு ஆதரவு: பாஜ தலைவர் அண்ணாமலை பரபரப்பு பேட்டி
அதிமுக வேட்பாளராக தென்னரசு போட்டியிடுவார் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு தமிழ்மகன் உசேன் கடிதம்
அமெரிக்காவில் உயிரிழப்பு, பார்வை பறிபோன விவகாரம் சென்னை கண் சொட்டு மருந்து தயாரிப்பு நிறுவனத்தில் சோதனை: ஒன்றிய அரசு அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை
தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தான நிர்வாகத்தின் கீழ் செயல்படும் 88 கோயில்களின் செலவுக்காக ரூ.3 கோடி அரசு மானியம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
பொது வேட்பாளர் யார் என இதுவரை எடப்பாடி தரப்பு தெரிவிக்கவில்லை: ஓபிஎஸ் அணி குற்றச்சாட்டு
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!