டெல்லி போலீசார் ஜாக்குலினிடம் தீவிர விசாரணை
2022-09-20@ 00:08:37

புதுடெல்லி: டெல்லி தொழிலதிபரை மிரட்டி பணம் பறித்த வழக்கு தொடர்பாக பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டசிடம் டெல்லி போலீசார் நேற்று 7 மணி நேரம் விசாரணை நடத்தினர். டெல்லியை சேர்ந்த தொழிலதிபர் சிவிந்தர் மோகன் சிங்கின் மனைவி ஆதிதி சிங் உள்ளிட்ட பலரிடம் மோசடி செய்த வழக்கில் தமிழ்நாட்டை சேர்ந்த சுகேஷ் சந்திரசேகரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
மோசடி செய்த பணத்தை இவர் பாலிவுட் நடிகைகளான ஜாக்குலின் பெர்னாண்டஸ்,நோரா பதேஹி உள்ளிட்டோருக்கு தாராளமாக செலவு செய்துள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்தது. ஜாக்குலின், நோராவுக்கு சுகேஷ் ஆடம்பர கார்களை வாங்கி கொடுத்தது அமலாக்க துறை விசாரணையில் அம்பலமானது. சுகேஷ் சந்திரசேகரின் குற்றப் பின்னணி தெரிந்து இருந்தும் அவருடன் ஜாக்குலின் பழகியதுடன் பரிசு பொருட்களை பெற்றுள்ளார் என்று அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
பிங்கி இரானி என்பவர் ஜாக்குலினை சுகேஷ் சந்திரசேகரிடம் அறிமுகப்படுத்தி வைத்தார். கடந்த புதன்கிழமையன்று ஜாக்குலின்,பிங்கி ஆகியோரிடம் டெல்லி பொருளாதார குற்ற பிரிவு போலீசார் 8 மணி நேரம் விசாரணை நடத்தினர். இந்நிலையில் மிரட்டி பணம் பறித்த வழக்கில் பொருளாதார குற்ற பிரிவு போலீசார் ஜாக்குலினிடம் நேற்று 7 மணி நேரம் விசாரணை நடத்தினர்.
மேலும் செய்திகள்
ஏழைகள், நடுத்தர வர்க்கத்துக்கு முன்னுரிமை அளிக்கும் பட்ஜெட்: பிரதமர் மோடி புகழாரம்
விசா பிரச்னையால் விமானத்தை தவறவிட்ட கவாஜா
வருமான வரி வரம்பு உயர்வால் சேமிப்பு பழக்கமே இருக்காது காப்பீடு திட்டங்களும் ஈர்க்காது: முதலீட்டு ஆலோசகர்கள் கவலை
டிசம்பரில் வருகிறது ஹைட்ரஜன் ரயில்
பனிச்சறுக்கு போட்டியில் பரிதாபம் 2 போலந்து வீரர்கள் காஷ்மீரில் பலி: 21 பேர் பத்திரமாக மீட்பு
ராதாபுரம் தேர்தல் வழக்கு கண்டிப்பாக விசாரித்து உத்தரவு பிறப்பிக்கப்படும்: அப்பாவு கோரிக்கை உச்சநீதிமன்றம் ஏற்பு
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!