25 ஆண்டாக போலீசுக்கு தண்ணி காட்டிய கொலை குற்றவாளி கைது: டெல்லி போலீசார் அதிரடி
2022-09-19@ 17:23:30

லக்னோ: கிட்டதட்ட 25 ஆண்டுக்கு முன் நடந்த கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த குற்றவாளியை டெல்லி போலீசார் கைது செய்தனர். கடந்த 1997ம் ஆண்டு டெல்லியின் துக்ளகாபாத் பகுதியில் கிஷன் லால் என்பவர் படுகொலை செய்யப்பட்டார். கொலையாளி தலைமறைவான நிலையில், அவரை கடந்த 25 ஆண்டுகளாக போலீசார் தேடி வந்தனர். ஆனால் கொலையாளி இருக்கும் இடத்தை போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை. தனிப்படை போலீசாருக்கு கிடைத்த தகவலின்படி உத்தரபிரதேச மாநிலம் ஃபரூகாபாத் மாவட்டம் கான்பூர் கிராமத்திற்கு போலீசார் சென்றனர்.
அங்கு காப்பீட்டு நிறுவன முகவராக செயல்பட்டு வந்த கொலையாளி ராமுவை போலீசார் அடையாளம் கண்டனர். அவனின் பின்னணி குறித்து சுற்றுவட்டாரப் பகுதியில் போலீசார் விசாரித்தனர். தற்போது லக்னோவின் ஜானகிபுரத்தில் இ-ரிக்ஷா ஓட்டிவந்த ராமுவை, அவரது மகன் கொடுத்த தகவலின் அடிப்படையில் போலீசார் சுற்றிவளைத்து கைது செய்தனர். இதுகுறித்து தனிப்படை போலீசார் கூறுகையில், ‘இ-ரிக்ஷா ஓட்டிவந்த ராமு, தனது ெபயரை அசோக் யாதவ் என்று மாற்றிக் கொண்டு 25 ஆண்டாக தலைமறைவாக வாழ்ந்து வந்தார். தற்போது கைது செய்யப்பட்ட அவர், கிஷன்லாலைக் கொன்றதை ஒப்புக் கொண்டார்’ என்றனர்.
மேலும் செய்திகள்
சிகிச்சை பெற வந்ததாக கூறி டாக்டர், அவரது மகன் மீது தாக்குதல் பிரபல மருத்துவக்கல்லூரி உரிமையாளர் மகன் உள்பட 8 பேருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு
துணிவு பட பாணியில் வங்கிக்குள் புகுந்து போலி டைம்பாம், துப்பாக்கியை காட்டி கொள்ளை முயற்சி: கல்லூரி மாணவர் கைது
மத்தியபிரதேசத்தில் கொடூரம், உடலில் 50 சூடு வைத்து 2 மாத குழந்தை கொலை
தலைமை செயலக அதிகாரிகள் என கூறி அரசு வேலை வாங்கி தருவதாக பல கோடி ரூபாய் மோசடி: சகோதரர்கள் உள்பட 6 பேர் கைது
கோவையில் ரூ10.82 லட்சம் மதிப்புள்ள 157 கிலோ கஞ்சா சாக்லேட் சிக்கியது: வட மாநில வியாபாரி கைது
ஐடி நிறுவனங்களில் வேலை தருவதாக கூறி நட்சத்திர ஓட்டலில் தங்க வைத்து இளம்பெண்களை ரூ.1 லட்சத்திற்கு விற்ற பாலியல் புரோக்கர் அதிரடி கைது: 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!