ஆவடி சத்தியமூர்த்தி நகரில் உள்ள மாநகராட்சி பள்ளியில் காலை சிற்றுண்டி திட்டம்; அமைச்சர் சா.மு.நாசர் ஆய்வு
2022-09-19@ 17:17:20

ஆவடி: ஆவடி மாநகராட்சி பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டத்தின் செயல்பாடு குறித்து அமைச்சர் சா.மு.நாசர் இன்று ஆய்வு செய்தார். தமிழகத்தில் 1 முதல் 5 வரை பயிலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு முதல் கட்டமாக காலை சிற்றுண்டி திட்டத்தை கடந்த 15ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அன்று முதல் அனைத்து பள்ளிகளில் இந்த திட்டம் சிறப்பாக நடந்து வருகிறது.
இந்நிலையில் ஆவடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சத்தியமூர்த்தி நகர் பகுதியில் அமைந்துள்ள அரசினர் மாநகராட்சி தொடக்க மற்றும் மேல்நிலை பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கும் காலை சிற்றுண்டி திட்டத்தின் செயல்பாட்டை பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் இன்று காலை ஆய்வு செய்தார்.
அப்போது, மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உணவை சாப்பிட்டு பார்த்தார். பின்னர், உணவின் தரம், சுவை குறித்து மாணவர்களிடம் கேட்டறிந்தார். அப்போது, ‘சாப்பாட்டின் தரத்தை இன்னும் அதிகரிக்க வேண்டும்’ என்று அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டார். ஆய்வின்போது, ஆவடி மேயர் உதயகுமார் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.
மேலும் செய்திகள்
சென்னை-கோவை இடையே வந்தே பாரத் ரயில்: பொது மேலாளர் ஆர்.என்.சிங் தகவல்
வாணியம்பாடியில் நெரிசலில் சிக்கி இறந்த 4 பெண்கள் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் 8 ஏக்கரில் நவீன பூங்கா அமைக்கப்படும்: அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேட்டி
டெல்டா மாவட்ட பயிர் சேதங்களை ஆய்வு செய்ய 2 அமைச்சர்கள் அனுப்பிவைக்கப்படுகிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
சென்னையில் குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்ட சுமார் ரூ.19.29 கோடி தங்க நகைகள், 2.70 கோடி ரொக்கம் உரிமையாளர்களிடம் ஒப்படைப்பு
சென்னையில் கடந்த ஒரு வாரத்தில் 7 குற்றவாளிகள் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது: நடப்பாண்டில் இதுவரை 32 குற்றவாளிகள் கைது
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!