பட்டியல் இனத்தை சேர்ந்தவருக்கு வீட்டை வாடகைக்கு விட்டால் குலதெய்வம் கோபித்துக்கொள்ளும்: விநோத விளக்கம் அளித்த பெண் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு..!!
2022-09-19@ 16:51:41

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே பட்டியல் இனத்தை சேர்ந்தவருக்கு வீட்டை வாடகைக்கு விட்டால் குலதெய்வம் கோபித்துக்கொள்ளும் என்று கூறிய பெண் மீது போலீசார் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஒட்டன்சத்திரம் காந்தி காய்கறி மார்க்கெட்டில் கடை நடத்தி வருபவர் வேலுசாமி. இவர் மனைவி லட்சுமியுடன் ஒட்டன்சத்திரம் அருகே நாயக்கனூரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். கடந்த வாரம் வேலுசாமிக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு வீடு கேட்டு ஒருவர் சென்றுள்ளார்.
அங்கு வேலுசாமியின் மனைவி லட்சுமி, வீடு வாடகைக்கு கேட்டு வந்த நபரிடம், நீங்கள் எந்த சாதி, மதம் என கேட்டுள்ளார். பட்டியல் இனத்தை சேர்ந்தவராக இருந்தால் வீடு தர முடியாது என்றும் அப்படி கொடுத்தால் தங்களது குலதெய்வம் கோபித்துக்கொள்ளும் என்றும் அந்த பெண் தெரிவித்திருக்கிறார். லட்சுமி பேசிய அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியது. இந்நிலையில் லட்சுமி மீது ஒட்டன்சத்திரம் காவல்நிலையத்தில் மதுரை வீரன் என்பவர் புகார் கொடுத்தார். அதன் பேரில் லட்சுமி மீது போலீசார் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.
மேலும் செய்திகள்
ஐஐடி உள்ளிட்ட ஒன்றிய உயர்கல்வி நிறுவனங்களில் 5 ஆண்டில் 61 பேர் தற்கொலை: மதுரை எம்பி கேள்விக்கு ஒன்றிய அமைச்சர் அதிர்ச்சி பதில்
பாதிரியார் மீது 2 வாரத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் ஆபாச வீடியோ பரப்பியவர்களுக்கு வலை: குமரி எஸ்.பி பரபரப்பு பேட்டி
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கோலாகலம்யுகாதி பண்டிகை கொண்டாட்டம்: ஷோபகிருத ஆண்டு பஞ்சாங்கம் படித்து காண்பித்த அர்ச்சகர்கள்
பட்டாசு ஆலை விபத்தில் பெண் பலி
ரயிலில் பாய்ந்து ஆசிரியை தற்கொலை
ஈரோடு மாநகராட்சி கமிஷனர் வீட்டில் ரெய்டு பல்லாவரம் நகராட்சியில் நடந்த முறைகேடு ஆவணங்கள் சிக்கியது
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி
டோக்கியோ, வாஷிங்டன், பெய்ஜிங்கில் செர்ரி மலரும் பருவம் தொடக்கம்..!!
பாக்தாத் சர்வதேச மலர் திருவிழாவின் மனதை கொள்ளை கொள்ளும் படங்கள்!!
சோமாலியாவில் நிலவும் பஞ்சம்: கடந்த ஆண்டு மட்டுமே 43,000 பேர் உயிரிழப்பு
ஆஸ்திரேலியாவின் டார்லிங் ஆற்றில் திடீர் வெப்பநிலை மாற்றத்தால் லட்சக்கணக்கான மீன்கள் உயிரிழப்பு..!!