ஐ.நா சபைக் கூட்டம்: ஒன்றிய அமைச்சர் குழு நியூயார்க் பயணம்
2022-09-19@ 16:42:58

புதுடெல்லி: ஐ.நா சபை கூட்டத்தில் பங்கேற்பதற்காக ஒன்றிய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தலைமையிலான குழு நியூயார்க் சென்றுள்ளது. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நேற்று ெதாடங்கி வரும் 24ம் தேதி ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 77வது கூட்டத் தொடர் நடைபெறுகிறது. இந்த கூட்டத் தொடரில் பங்கேற்பதற்காக ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தலைமையிலான குழு அங்கு சென்றுள்ளது.
இதுதொடர்பாக ஒன்றிய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ஒன்றிய வெளியுறவு ஜெய்சங்கர், ஜி 4 நாடுகளின் (இந்தியா, பிரேசில், ஜப்பான், ஜெர்மனி) அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்பார். ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் விரிவான சீர்திருத்தம் கொண்டு வருதல் குறித்து அந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது. முன்னதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர், ஐ.நா. பொதுச் செயலாளர் ஆகியோரை இந்திய வெளியுறவு அமைச்சர் சந்தித்து பேச உள்ளார்.
ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையின் 77வது அமர்வில் ஒன்றிய அமைச்சர் ஜெய்சங்கர் வரும் 24ம் தேதி உரையாற்றுவார்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் இன்று காலை அமெரிக்காவின் நியூயார்க் வந்தடைந்தார். அவரை, ஐ.நாவுக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி ருசிரா கம்போஜ் மற்றும் நியூயார்க் தூதரக அதிகாரி ரந்தீர் ஜெய்ஸ்வால் ஆகியோர் வரவேற்றனர்.
மேலும் செய்திகள்
ராகுல்காந்தி உதவியாளரிடம் அமலாக்கத்துறை விசாரணை
சன்னிலியோன் நிகழ்ச்சி அருகே குண்டு வெடிப்பு: மணிப்பூரில் பரபரப்பு
உச்சநீதிமன்றத்தில் 5 புதிய நீதிபதிகள் நாளை பதவி ஏற்பு: கொலிஜீயம் பரிந்துரைக்கு அரசு ஒப்புதல்
ஜவுளி துறைக்கு வரப்பிரசாதம் 90% தண்ணீரை குறைக்கும் நானோ தொழில்நுட்பம்: ஐஐடி ரோபர் கண்டுபிடிப்பு
முதலில் ஆன்லைன் தேர்வு அக்னிவீர் ஆள்சேர்ப்பு முறையில் மாற்றம்
அதானியின் எப்பிஓ விலகலால் இந்திய பொருளாதாரத்தின் மதிப்பு பாதிக்கப்படவில்லை: நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கருத்து
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!