வார விடுமுறையையொட்டி கும்பக்கரை அருவியில் உற்சாக குளியல் -குவியும் சுற்றுலாப் பயணிகள்
2022-09-19@ 14:12:29

பெரியகுளம் : கும்பக்கரை அருவியில் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதால், வார விடுமுறை நாட்களில் சுற்றுலாப்பயணிகள் உற்சாகமாக குளித்து வருகின்றனர்.
தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான கொடைக்கானல், வட்டக்கானல் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த மாத இறுதியில் பெய்த கனமழை காரணமாக கும்பக்கரை அருவிக்கு நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதனால் கடந்த 31ம் தேதி முதல் கும்பக்கரை அருவியில் சுற்றுலாப்பயணிகள் குளிக்க தடை விதித்து வனத்துறையினர் அறிவித்தனர். கடந்த சில நாட்களாக மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை இல்லாததால் கும்பக்கரை அருவிக்கு நீர்வரத்து சீரானது.இதையடுத்து, கும்பக்கரை அருவியில் சுற்றுலாப்பயணிகள் குளிக்க வனத்துறையினர் அனுமதித்துள்ளனர். கடந்த சில நாட்களாக கும்பக்கரை அருவியில் சுற்றுலாப்பயணிகள் உற்சாகமாக குளித்து வருகின்றனர்.
அதிலும் வார விடுமுறையான நேற்று சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகம் காணப்பட்டது. தேனி மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலாப்பயணிகள் தங்கள் குடும்பத்தினருடன் வந்து உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். மேலும், அருவியில் குளிக்க வரும் சுற்றுலாப் பயணிகளின் நலன்கருதி, முதலுதவி உபகரணங்கள் மற்றும் செவிலியர்களை பணியில் அமர்த்த வேண்டும் என சுற்றுலாப்பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் செய்திகள்
விருதுநகர் நகராட்சி பகுதியில் மூடிக் கிடக்கும் சமுதாயக் கூடங்களை திறக்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை
சிவகாசியில் அம்ரித் பாரத் ஸ்டேஷன் திட்டம் மூலம் ரயில் நிலையத்தை மேம்படுத்த வேண்டும்: பயணிகள் கோரிக்கை
தைப்பூச திருவிழாவை ஒட்டி தோவாளை மலர் சந்தையில் பூக்களின் விலை கிடு கிடு உயர்வு
அண்ணாமலை பல்கலையில் மிகையாக உள்ள பேராசிரியர்கள் உள்பட 1,390 பேர் பிற துறைகளுக்கு பணிநிரவல்: உத்தரவை திரும்ப பெற ஆசிரியரல்லா பணியாளர்கள் கோரிக்கை
சதுரகிரி கோயிலுக்கு செல்ல தடையால் தாணிப்பாறை வனத்துறை கேட் வெறிச்
வாணியம்படி அருகே தேசிய நெடுஞ்சாலை சுரங்கப்பாதையில் தேங்கி நிற்கும் தண்ணீர்: நடவடிக்கைக்கு பொதுமக்கள் கோரிக்கை
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!