கடம்பூர் மலைக்கிராமத்தில் புலியின் நகம், பற்கள் பதுக்கிய 4 பேர் சிக்கினர்
2022-09-19@ 12:15:54

சத்தியமங்கலம் : சத்தியமங்கலம் அடுத்துள்ள கடம்பூர் மலைப்பகுதியில் புலியின் பற்கள், நகங்கள் மற்றும் எலும்புகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், கடம்பூர் வனத்துறையினர் சின்ன உள்ளேபாளையம் கிராமத்தில் உள்ள சந்தோஷ் என்பவரது வீட்டை சோதனையிட்டனர். இதில், வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த புலியின் பற்கள், நகங்கள், எலும்புகள் மற்றும் எறும்புதிண்ணி ஓடுகள் கைப்பற்றப்பட்டன.
இதுகுறித்து வனத்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், அதே ஊரைச் சேர்ந்த சந்தோஷ் (25), பத்ரிபடுகை கிராமத்தைச் சேர்ந்த மூர்த்தி (29), மாதேவன் (45), ராஜப்பன் (37) ஆகிய நான்கு பேருக்கு இச்சம்பவத்தில் தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டு அவர்களை பிடித்து சத்தியமங்கலம் மாவட்ட வன அலுவலர் கிருபாசங்கர் முன்னிலையில் ஆஜர்படுத்தினர். இதைத்தொடர்ந்து, மாவட்ட வன அலுவலர் உத்தரவின் பேரில் நான்கு பேரையும் கோபி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மேலும் செய்திகள்
புதுச்சேரியில் அமெரிக்க பெண் பலாத்காரம்
திருமண மண்டபத்தில் நகை திருடிய பெண் கைது
ஏட்டு மனைவியுடன் தவறான உறவு இந்து மக்கள் கட்சி நிர்வாகி கொலை: 8 பேர் கைது
ரூ.2 கோடி மதிப்பு நிலத்திற்கு போலி ஆவணம் தயாரித்த முதியவர் அதிரடி கைது
ரூ.24 லட்சம் திருடிய காவலாளி கைது
டிவிட்டரில் நடிகை காயத்ரி ரகுராம் குறித்து ஆபாச பதிவு ராணிப்பேட்டை மாஜி பாஜ மாவட்ட நிர்வாகி மீது வழக்கு: கைது செய்ய சென்னை சைபர் க்ரைம் போலீஸ் தீவிரம்
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!