தஞ்சை அருகே கொள்ளிடம் ஆற்றில் தூண் இடிந்து கூட்டுக் குடிநீர்த் திட்டப்பணி பாதிப்பு: போர்க்கால அடிப்படையில் பாலத்தை சீரமைக்க மக்கள் கோரிக்கை
2022-09-19@ 10:49:16

தஞ்சாவூர் : தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாள் அருகே கொள்ளிடம் ஆற்றில் கட்டப்பட்டுள்ள குடிநீர் நீரேற்று நிலையத்தின் தூண் இடிந்து விழுந்ததால் வேளாங்கண்ணி கூட்டு குடிநீர் திட்டப்பணி பாதிக்கப்பட்டுள்ளது. நாகை மாவட்டம் வேளாங்கண்ணி கூட்டு குடிநீர் திட்டத்திற்காக திருப்பனந்தாள் அருகே வாண்டையார் இருப்பு கிராமத்தில் கொள்ளிடம் ஆற்றில் நீரேற்று நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நீரேற்று நிலையத்தின் ஒரு தூண் நேற்று இரவு திடீரென இடிந்து விழுந்தது.
மற்றொரு தூணில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால், வேளாங்கன்னி கூட்டு குடிநீர் திட்டப்பணி பாதிக்கப்பட்டுள்ளதால் போர்கால அடிப்படையில் பாலத்தை புதிதாக சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. நீரேற்று நிலையத் தூண் இடிந்து விழுந்த போது அதிஷ்டவசமாக பணியாளர்கள் யாரும் அங்கு இல்லை. இல்லையேல் உயிர் சேதம் ஏற்பட்டிருக்கும். 15 ஆண்டுக்கு முன்னரும் இது போன்று வெள்ளப்பெருக்கின் போது பாலம் இடிந்து விழுந்தது நினைவு கூறத்தக்கது.
மேலும் செய்திகள்
நீலகிரி மாவட்டத்தில் கோடை விழா தேதிகள் அறிவிப்பு: ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் 125வது மலர் கண்காட்சி மே 19ல் தொடக்கம்!!
கோவையில் துப்பாக்கியுடன் கைதான இந்து முன்னணி நிர்வாகியிடம் போலீசார் தீவிர விசாரணை
மதுரை மாநகராட்சி கிழக்கு மண்டலத்தில் மக்கள் குறைதீர் முகாம்
பால் கொள்முதல் விலையை உயர்த்தக்கோரி சாலையில் பாலை கொட்டி விவசாயிகள் மறியல் போராட்டம்-முசிறி அருகே பரபரப்பு
கள்ளிக்குடி அருகே களப்பலி நடுகல் சிற்பம் கண்டுபிடிப்பு
வத்திராயிருப்பு பகுதியில் தேங்காய் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை
ஈக்வடார் நாட்டில் பயங்கர நிலச்சரிவு : 16 பேர் பலி
அடடா.. என்ன ஒரு அழகு!: ஆண்களெல்லாம் அழகு தேவதையாக மாறும் கேரள திருவிழா..!!
இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!
அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!
ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!