ஆழ்வார்பேட்டை மசாஜ் சென்டரில் பாலியல் தொழில் நடத்தியவர் கைது: 4 வடமாநில இளம்பெண்கள் மீட்பு
2022-09-19@ 02:10:54

சென்னை: ஆழ்வார்பேட்டை மசாஜ் சென்டரில் வடமாநில இளம் அழகிகளை வைத்து பாலியல் தொழில் நடத்தியவரை விபச்சார தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். ஆழ்வார்பேட்டை பகுதியில் சிலர் மசாஜ் சென்டர் என்ற பெயரில் வாடிக்கையாளர்களை மயக்கி, இளம்பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்து வருவதாகவும், சிலர் வாடிக்கயைாளர்களை கட்டாயப்படுத்தி பணம் பறிப்பதாகவும் மத்திய குற்றப்பிரிவின் விபச்சார தடுப்பு பிரிவு உதவி கமிஷனர் ராஜலட்சுமிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்படி, விபச்சார தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் லட்சமி தலைமையிலான தனிப்படையினர் கடந்த 16ம் தேதி ஆழ்வார்பேட்டை ஸ்ரீராம் காலனியில் இயங்கி வந்த மசாஜ் சென்டரில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது மசாஜ் சென்டருக்கு வரும் வடிக்கையாளர்களிடம் வடமாநில இளம் பெண்களை காட்டி பாலியல் உணர்வை தூண்டி, அதன் மூலம் பாலியல் தொழில் செய்து வந்தது உறுதியானது.
அதைதொடர்ந்து மசாஜ் சென்டர் உரிமையாளர் காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் பல்லாவரம் ஆறுமுகம் தெருவை சேர்ந்த நிர்மல் ராஜ் (31) என்பவரை இன்ஸ்பெக்டர் லட்சுமி தலைமையிலான போலீசார் அதிரடியாக கைது செய்தனர். மேலும், பாலியல் தொழிலுக்கு பயன்படுத்திய வடமாநிலத்தை சேர்ந்த 4 இளம் பெண்களையும் மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
மேலும் செய்திகள்
சிகிச்சை பெற வந்ததாக கூறி டாக்டர், அவரது மகன் மீது தாக்குதல் பிரபல மருத்துவக்கல்லூரி உரிமையாளர் மகன் உள்பட 8 பேருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு
துணிவு பட பாணியில் வங்கிக்குள் புகுந்து போலி டைம்பாம், துப்பாக்கியை காட்டி கொள்ளை முயற்சி: கல்லூரி மாணவர் கைது
மத்தியபிரதேசத்தில் கொடூரம், உடலில் 50 சூடு வைத்து 2 மாத குழந்தை கொலை
தலைமை செயலக அதிகாரிகள் என கூறி அரசு வேலை வாங்கி தருவதாக பல கோடி ரூபாய் மோசடி: சகோதரர்கள் உள்பட 6 பேர் கைது
கோவையில் ரூ10.82 லட்சம் மதிப்புள்ள 157 கிலோ கஞ்சா சாக்லேட் சிக்கியது: வட மாநில வியாபாரி கைது
ஐடி நிறுவனங்களில் வேலை தருவதாக கூறி நட்சத்திர ஓட்டலில் தங்க வைத்து இளம்பெண்களை ரூ.1 லட்சத்திற்கு விற்ற பாலியல் புரோக்கர் அதிரடி கைது: 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!