திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் பிரதமர் மோடி பிறந்த நாளில் உடல் உறுப்புகள், ரத்த தானம்
2022-09-18@ 17:45:53

திருவள்ளூர்: திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லூரி வளாகத்தில், பிரதமர் மோடியின் 72வது பிறந்தநாளை முன்னிட்டு ஒன்றிய, மாநில அரசு மற்றும் தேசிய நலவாழ்வு மையம் வழிகாட்டுதல்படியும் பாஜக மாவட்ட இளைஞரணி சார்பில் ரத்ததானம் மற்றும் உடல் உறுப்பு தானம் நடைபெற்றது. முகாமுக்கு பாஜக மாவட்ட இளைஞரணி தலைவர் எஸ்.டில்லிபாபு தலைமை வகித்தார். இளைஞரணி நிர்வாகிகள் அபிலாஷ், ஜீவா, திலக அரசன், கார்த்திக், தாமோதரன் முன்னிலை வகித்தனர். அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் அரசி ஸ்ரீவத்சன், பாஜக மாவட்ட தலைவர் அஷ்வின் என்ற ராஜசிம்ம மகேந்திரா ஆகியோர் முகாமை தொடங்கி வைத்தனர்.
முகாமில் 74 பேர் ரத்ததானமும், 64 பேர் உடல் உறுப்பு தானமும் செய்தனர். அவர்களை பாராட்டி சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. விழாவில், சுகாதாரத்துறை துணை இயக்குநர் கே.ஆர். ஜவஹர்லால், கல்லூரி துணை முதல்வர் ந.திலகவதி, ஆர்எம்ஓ ராஜ்குமார், மருத்துவர்கள் ஜெகதீசன், தமிழ்ச்செல்வி, செல்வம், குருதி பரிமாற்று அலுவலர் தே.பிரதீபா பாஜக மாநில ஒபிசி அணி செயலாளர் ஏ.ராஜ்குமார், மாவட்ட நிர்வாகிகள் இரா.கருணாகரன், ஆர்யா சீனிவாசன், லயன் சீனிவாசன், ஜெய்கணேஷ், சி.பி.ரமேஷ்குமார், சித்ராதேவி, நகரத் தலைவர் சதிஷ்குமார், புருஷோத்தமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகள்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 4-ம் வேட்புமனு தாக்கல் நிறைவு: ஒரே நாளில் நாளில் 16 பேர் வேட்புமனு தாக்கல்
திருமழிசையில் மண்புழு உரம் தயார் செய்யும் பணி
மறைமலைநகர் அருகே பட்டாக்கத்தியுடன் சுற்றி மிரட்டிய வாலிபர் கைது
காஞ்சிபுரத்தில் அண்ணா நினைவு தினம் திமுகவினர் அமைதி பேரணி அனைத்துகட்சியினர் மரியாதை
டெல்டாவில் நள்ளிரவு வரை மழை; அறுவடைக்கு தயாராக இருந்த 70,000 ஏக்கர் சம்பா மூழ்கியது: 9,000 ஏக்கரில் உப்பு உற்பத்தி பாதிப்பு
வேளாண்மை பொறியியல் துறை சார்பில் 100% மானியத்தில் விவசாயிகளுக்கு கிணறுகளுடன் பம்பு செட்கள்: காஞ்சிபுரம் கலெக்டர் தகவல்
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!