முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கோட்டையில் அரசு ஊழியர்கள் சமூகநீதிநாள் உறுதிமொழி ஏற்பு
2022-09-18@ 00:51:39

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை, தலைமை செயலகத்தில் அரசு ஊழியர்கள் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.
பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு, அனைத்து அரசு அலுவலகங்களிலும் நேற்று சமூக நீதிநாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. சென்னை, தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அவருடன் அமைச்சர்கள், அனைத்து துறை செயலாளர்கள், உயர் அதிகாரிகள், அரசு ஊழியர்கள் கலந்து கொண்டனர். சென்னை தலைமை செயலக வளாகத்தில் ராணுவ அணிவகுப்பு மைதானத்தில் நேற்று காலை 11 மணிக்கு அனைவரும் ஒன்றுகூடி ‘‘சமூக நீதி நாள்” உறுதிமொழி ஏற்றனர்.
அப்போது, முதல்வர் கூறிய வாசகத்தை அனைவரும் கூறி உறுதி ஏற்றுக் கொண்டனர்.அதன்படி, ‘‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற அன்பு நெறியையும் - யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பண்பு நெறியையும் எனது வாழ்வியல் வழிமுறைகளாக கடைபிடிப்பேன். சுயமரியாதை ஆளுமை திறனும் - பகுத்தறிவு பார்வையும் கொண்டவையாக என்னுடைய செயல்பாடுகள் அமையும். சமத்துவம், சகோதரத்துவம், சமதர்மம் ஆகிய கொள்கைகளுக்காக என்னை ஒப்படைத்துக் கொள்வேன். மானுடத்தின் மீது பற்றையும் மனிதாபிமானத்தையும் என்றும் போற்றுவேன். சமூக நீதியையே அடித்தளமாக கொண்ட சமுதாயம் அமைத்திட இந்த நாளில் உறுதியேற்கிறேன்” என்று கூறி உறுதிமொழி ஏற்றனர்.
மேலும் செய்திகள்
பரந்தூரில் புதிய பசுமை விமான நிலையம் உறுதியாக அமைக்கப்படும்: ஒன்றிய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா பேட்டி
சென்னை-கோவை இடையே வந்தே பாரத் ரயில்: பொது மேலாளர் ஆர்.என்.சிங் தகவல்
வாணியம்பாடியில் நெரிசலில் சிக்கி இறந்த 4 பெண்கள் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் 8 ஏக்கரில் நவீன பூங்கா அமைக்கப்படும்: அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேட்டி
டெல்டா மாவட்ட பயிர் சேதங்களை ஆய்வு செய்ய 2 அமைச்சர்கள் அனுப்பிவைக்கப்படுகிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
சென்னையில் குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்ட சுமார் ரூ.19.29 கோடி தங்க நகைகள், 2.70 கோடி ரொக்கம் உரிமையாளர்களிடம் ஒப்படைப்பு
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!