திருவாலாங்காடு அருகே சிக்னல் பழுது; நடுவழியில் நின்ற திருப்பதி, கோவை ரயில்கள்
2022-09-18@ 00:40:20

சென்னை: திருத்தணி அருகே திருவாலங்காடு பகுதியில் சிக்னல் பழுதால் திருப்பதி, கோவை மற்றும் மின்சார ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. இதனால், பயணிகள் உரிய நேரத்தில் வேலைக்கு போக முடியாமலும், மற்றவர்கள் குறித்த நேரத்தில் சொந்த ஊருக்கு செல்ல முடியாமலும் அவதிப்பட்டனர். திருவள்ளூர் திருவாலங்காடு, மோசூர் ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தில் பாயின்ட் சிக்னல் கோளாறு ஏற்பட்டது. இதன்காரணமாக அரக்கோணம் வழித்தடம் வழியாக கோவை சென்ற எக்ஸ்பிரஸ் ரயில், திருப்பதி சென்ற சப்தகிரி எக்ஸ்பிரஸ் மற்றும் புறநகர் ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. இதனால் சுமார் 2 மணி நேரத்துக்கு மேலாக ரயில் சேவை பாதிக்கப்பட்டு, வேலை மற்றும் சொந்த ஊருக்கு செல்பவர்கள் ரயிலிலேயே உட்கார்ந்து இருந்தனர்.
அவர்களுக்கு முறைப்படி தகவல் தெரிவிக்கப்படவில்லை. மேலும், தொழில் சம்பந்தமாக சென்றவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். உள்ளூர் பயணிகள் பெரும்பாலானவர்கள் தண்டவாளம் வழியாக நடந்துசென்று பஸ்களை பிடித்து வேலைக்கு சென்றனர். தகவறிந்ததும் ரயில்வே அதிகாரிகளும் ஊழியர்களும் விரைந்து வந்தனர். பின்னர் பாயிண்ட் சிக்னல் கோளாறை சரி செய்தனர். இதன்பின்னர் அடுத்தடுத்து புறநகர் ரயில்கள் புறப்பட்டு சென்றது. இதன்காரணமாக பள்ளி, கல்லூரி மாணவர்கள், அரசு, தனியார் கம்பெனிகளுக்கு வேலைக்கு சென்றவர்கள் என பலரும் பாதிப்பு அடைந்தனர். சுமார் 2 மணிநேரம் தாமதமாக ரயில்கள் புறப்பட்டு சென்றன.
மேலும் செய்திகள்
சென்னையில் வரும் 31-ம் தேதி தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவன வளாகத்தில் தொழில் முனைவோர்க்கான விழிப்புணர்வு முகாம்
இந்திய சுதந்திரத்தின் 75 வது ஆண்டைக் கொண்டாடும் வகையில் தமிழ்நாடு சிறையில் உள்ள 60 கைதிகள் விடுதலை
பேரறிஞர் அண்ணாவின் 54வது நினைவு நாளையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி
“கள ஆய்வில் முதலமைச்சர்” என்ற புதிய திட்டத்தினை பிப்.1ம் தேதி தொடங்கி வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
கடுமையான குளிர், பயணிகள் எண்ணிக்கை குறைவால் சென்னையில் 6 விமானங்கள் ரத்து
நாளை முதல் பிப். 1-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!
மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற செல்லப் பிராணிகள் திருவிழா: லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள Pet Fed நிகழ்ச்சி
பிரான்ஸ் அரசின் ஓய்வூதிய சீர்திருத்தக் கொள்கைக்கு எதிர்ப்பு: அதிபர் மேக்ரான் அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்..!!
பெரிய அரங்குகள், நூலகங்கள், நவீன வசதிகள்: புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் மாதிரி புகைப்படங்கள் வெளியீடு..!!
தமிழ்நாடு பெயரை மாற்றுமாறு கூறிய ஆளுநர் ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து காங். கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!!