புழல் சிறை எதிரே பஸ் நிறுத்த நிழற்குடை சாலை விரிவாக்கத்தில் அகற்றப்பட்டது
2022-09-17@ 18:06:48

புழல்: சென்னை-கொல்கத்தா செல்லும் ஜிஎன்டி சாலையின் சர்வீஸ் சாலையில், புழல் மத்திய சிறைக்கு எதிரே விரிவாக்க பணிகளின்போது, பஸ் நிழற்குடை அகற்றப்பட்டது. பின்னர் புதிய நிழற்குடை அமைக்கப்படாததால், வெயில் மற்றும் மழை காலங்களில் பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் பெரும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.
இதனால் அங்குள்ள மரத்தடியில் பழைய மழைநீர் கால்வாயின் மேல் அமர்ந்து, பஸ்சுக்கு காத்திருக்கும் அவல நிலை உள்ளது. மேலும், இங்கு மின்விளக்கு வசதி இல்லாததால், இரவு நேரங்களில் பஸ்சுக்காக காத்திருக்கும் பெண்கள் உள்பட வயதானவர்களிடம் செயின் பறிப்பு, வழிப்பறி, பாலியல் தொல்லை உள்ளிட்ட பல்வேறு குற்ற செயல்களும் நடந்து வருகிறது.
இதேபோல் புழல் அம்பேத்கர் சிலை, சைக்கிள் ஷாப், காவாங்கரை ஆகிய 3 பஸ் நிறுத்தங்களில் அகற்றப்பட்ட பயணிகள் நிழற்குடை இதுவரை அமைக்கப்படவில்லை. அங்கும் மின்விளக்கு வசதி இல்லாததால், பல்வேறு குற்ற சம்பவங்களும் நடக்கிறது. எனவே, புழல் பகுதிகளில் 4 பஸ் நிறுத்தங்களில் அகற்றப்பட்ட பயணிகள் நிழற்குடைகளை உடனடியாக அமைக்கவும், மின்விளக்கு வசதிகளை ஏற்படுத்தவும் சம்பந்தப்பட்ட துறை உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகளும் அப்பகுதி மக்களும் வலியுறுத்துகின்றனர்.
மேலும் செய்திகள்
சென்னை விமான நிலையத்தில் ரூ.1.15 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்
சென்னை மெட்ரோ இரயில் திட்டம் கட்டம்-2-ல் வழித்தடம் 4-ல் மின்சாரம் மற்றும் பராமரிப்பு பணிகளுக்கு ரூ.134.9 கோடி மதிப்பில் ஒப்பந்தம்
சென்னை - பெங்களூரு விரைவுச்சாலைக்கு நிலம் எடுப்பில் ரூ.100 கோடி மோசடி..? அதிர்ச்சி தகவல்..!
ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர்ககளை பணியிடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு
மாணவர்கள் சுய ஒழுக்கத்துடன் திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்: கலந்துரையாடல் நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
தமிழ்நாட்டில் அடுத்த 2 மணி நேரத்தில் 23 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!