ஷாருக்கானுடன் 250 பெண் ஸ்டன்ட் கலைஞர்கள் மோதல்: சென்னையில் படப்பிடிப்பு
2022-09-17@ 02:21:36

சென்னை: அட்லி இயக்கும் ஜவான் படத்துக்காக 250 பெண் ஸ்டன்ட் கலைஞர்களுடன் ஷாருக்கான் மோதும் காட்சி சென்னையில் படமாக்கப்பட்டது. பிரபல இயக்குனர் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘ஜவான்’. நயன்தாரா மற்றும் தீபிகா படுகோன் நாயகிகளாக நடித்து வரும் இந்த படம் இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மொழிகளில் உருவாகி வருகிறது. ஷாருக்கானின் ரெட் சில்லீஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு உள்ளது. அடுத்த ஆண்டு இந்த படம் வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது சென்னை அருகே பிரமாண்டமான செட்டில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்த படப்பிடிப்பில் 200 முதல் 250 பெண் ஸ்டன்ட் கலைஞர்கள் பங்கேற்றனர். ஷாருக்கானுடன் அவர்கள் மோதும் காட்சி படமாக்கப்பட்டது. இந்த பெண் ஸ்டன்ட் கலைஞர்கள் மும்பையிலிருந்து சென்னைக்கு வரவழைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதில் பலர் வெளிநாட்டு ஸ்டன்ட் கலைஞர்கள் என கூறப்படுகிறது. இந்த தகவலை படக்குழுவினர் தெரிவித்தனர்.
மேலும் செய்திகள்
இந்து சமய அறநிலையத்துறையில் திருப்பூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டக் குழுக்களுக்கு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமனம்..!
குமரி, நெல்லை உள்பட தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
அதிமுக சார்பில் ஒரே அணியாக ஒரே வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்பதே பாஜகவின் நிலைப்பாடு: அண்ணாமலை பேட்டி
ஒன்றுபட்ட அதிமுக அவசியம்!: ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரும் இணைந்து தேர்தலை சந்திக்க வலியுறுத்தினோம்.. பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி பேட்டி
தொடர்மழையால் நெற்பயிர்கள் பாதிப்பு: உழவர்களுக்கு இழப்பீடு வழங்க பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்..!!
ஆசிரியர் கி.வீரமணியின் சமூகநீதி விழிப்புணர்வு பயணம் வெற்றி பெறட்டும்: வைகோ வாழ்த்து
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!