சென்னை ஓபன் மகளிர் டென்னிஸ்: இன்று கால் இறுதி போட்டிகள்
2022-09-16@ 16:43:58

சென்னை: சென்னை ஓபன் மகளிர் சர்வதேச டென்னிஸ் போட்டி நடந்து வருகிறது. இதில் ஒற்றையர் பிரிவில் நேற்றிரவு நடந்த 2வது சுற்று ஆட்டம் ஒன்றில் ஜெர்மனியின் தாட்ஜனா மரியாவும், அர்ஜென்டினாவின் நடியா போடோரோஸ்காவும் மோதினர். இதில் போடோரோஸ்கா 3-6, 6-2, 7-6 என தாட்ஜனாவை வீழ்த்தி கால்இறுதிக்குள் நுழைந்தார். மற்றொரு ஆட்டத்தில் போலந்தின் மேக்டா லினெட் 6-2, 6-0 என ரஷியாவின் ஒக்சனா செலக்மேத்வா வென்றார்.
இங்கிலாந்தின் கேட்டி ஸ்வான், 7-6 , 6-2 என ரஷியாவின் அனஸ்டசியா கசனோவாவை என்ற நேர் செட்டில் தோற்கடித்து கால் இறுதிக்குள் நுழைந்தார். ரஷ்யாவின் 22 வயது வர்வரா கிராச்சேவா, 6-1, 7-5 என கனடாவின் கரோல் ஜாவோவை வென்றார். இன்று மாலை கால் இறுதி போட்டிகள் நடக்கிறது. இதில் வர்வரா கிராச்சேவா-செக்குடியரசின் லிண்டா, இங்கிலாந்தின் கேட்டி ஸ்வான்-ஜப்பானின் நாவோஹிபினோ, கனடாவின் ரெபேக்கா மரினோ-போலந்தின் மேக்டா லினெட், கனடாவின் யூஜெனி பவுச்சார்ட்-அர்ஜென்டினாவின் நதியா பொடோரோஸ் மோதுகின்றனர்.
மேலும் செய்திகள்
சில்லி பாயின்ட்...
தாய்லாந்து ஓபன் டென்னிஸ் அரையிறுதிக்கு முன்னேறினார் வாங் ஸின்யு
ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: அரையிறுதியில் கர்நாடகா
ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: போராடி வென்றது மத்திய பிரதேசம்; பெங்கால் அணியும் தகுதி
சில்லி பாயின்ட்...
ரஞ்சி கோப்பை காலிறுதி 93 ரன்னில் சுருண்டது ஆந்திரா: ம.பி.க்கு வெற்றி வாய்ப்பு
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!