கே.கே.நகர், ராமாபுரம் பகுதிகளில் குடிநீர் விநியோகம் நாளை நிறுத்தம்: வாரியம் அறிவிப்பு
2022-09-16@ 03:26:19

சென்னை: வளசரவாக்கத்தில் பிரதான குழாய் இணைக்கும் பணி நடைபெற உள்ளதால் கே.கே.நகர், ராமாபுரம் உள்ளிட்ட சுற்று பகுதிகளில் நாளை குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும் என்று சென்னை குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை குடிநீர் வாரியம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வளசரவாக்கம், ராமகிருஷ்ணா நகர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியின் 400 மி.மீ விட்டமுள்ள உந்துகுழாயுடன் ஆற்காடு சாலை மற்றும் காமராஜர் சாலை சந்திப்பில் அமைந்துள்ள 1200 மி.மீ விட்டமுள்ள பிரதான குழாயினை இணைக்கும் பணிகள் நாளை காலை 5 மணி முதல் மாலை 5 மணி வரை மேற்கொள்ளப்பட உள்ளது.
இதனால், பகுதி-10க்குட்பட்ட எம்.ஜி.ஆர் நகர், கே.கே.நகர், நெசப்பாக்கம், ஜாபர்கான்பேட்டை, சைதாப்பேட்டை பகுதியில் ஜோன்ஸ் ரோடு வரை மற்றும் பகுதி-11க்குட்பட்ட ராமாபுரம், வளசரவாக்கம், மதுரவாயல், தாய்சா குடியிருப்பு, கே.கே.நகர் மற்றும் சூளைமேடு குடிநீர் பகிர்மான நிலையத்திற்குட்பட்ட பகுதிகளுக்கு குழாயின் மூலமாக வழங்கும் குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. மேலும், பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக வேண்டிய அளவு குடிநீரை சேமித்து வைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
அவசரத் தேவைகளுக்கு லாரிகள் மூலம் குடிநீர் பெற்றுக்கொள்ளலாம். இதற்காக பகுதி-10க்குட்பட்ட பொதுமக்கள் பொறியாளரை 8144930910 என்ற எண்ணிலும், பகுதி-11க்குட்பட்ட பொதுமக்கள் பொறியாளரை 8144930911 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அடுத்த 3 நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
ஒருங்கிணைந்த பொறியியல் சார்நிலை பணியில் நெடுஞ்சாலை, பொதுப்பணி துறையில் 1,083 காலியிடங்கள்: தேர்வுக்கு மார்ச் 4ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம், டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
கூட்டணி கட்சியின் உட்கட்சி பிரச்னையில் தலையிட மாட்டோம் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் எடப்பாடி வேட்பாளருக்கு ஆதரவு: பாஜ தலைவர் அண்ணாமலை பரபரப்பு பேட்டி
அதிமுக வேட்பாளராக தென்னரசு போட்டியிடுவார் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு தமிழ்மகன் உசேன் கடிதம்
அமெரிக்காவில் உயிரிழப்பு, பார்வை பறிபோன விவகாரம் சென்னை கண் சொட்டு மருந்து தயாரிப்பு நிறுவனத்தில் சோதனை: ஒன்றிய அரசு அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை
தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தான நிர்வாகத்தின் கீழ் செயல்படும் 88 கோயில்களின் செலவுக்காக ரூ.3 கோடி அரசு மானியம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!