விமான தளம் மீதான தாக்குதலை முறியடிக்க 100 டிரோன்கள் வாங்க விமானப் படை முடிவு
2022-09-15@ 02:33:46

புதுடெல்லி: ஜம்மு காஷ்மீரில் உள்ள விமான தளங்களை பாதுகாப்பதற்காக, 100 டிரோன்கள் கொள்முதல் செய்யப்பட உள்ளதாக விமானப்படை தெரிவித்தது.ஜம்மு காஷ்மீரில் உள்ள விமானப்படை தளத்தின் மீது, கடந்தாண்டு ஜூனில் 2 டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. வெடிபொருள் ஏற்றி வந்த 2 டிரோன்கள் நடத்திய இந்த தாக்குதலில் கட்டிடத்தின் மேற்கூரை சேதமடைந்தது. மிகவும் பாதுகாப்பான பகுதியாக கருதப்படும் விமானப்படை தளத்துக்குள், டிரோன்கள் மூலம் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியது புதிய அச்சுறுத்தலை ஏற்படுத்தி இருக்கிறது. இதை எதிர்கொள்ள, வான்வெளி பாதுகாப்பை மேம்படுத்த வேண்டிய நிலை உருவாகி உள்ளது.
இந்நிலையில், விமான தளங்கள் மீதான டிரோன் தாக்குதல்களை முறியடிக்க, ரிமோட் கன்ட்ரோல் மூலம் கட்டுப்படுத்த கூடிய டிரோன்கள், மருந்து, உணவுப் பொருட்கள் கொண்டு செல்லும் டெலிவரி டிரோன்கள் உள்பட 100 டிரோன்களை வாங்க விமானப்படை முடிவு செய்துள்ளது. இவை உள்நாட்டு விற்பனையாளர்கள் அல்லது உள்நாட்டிலேயே தயாரிப்பவர்களிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட உள்ளது. 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படும், என விமானப்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் செய்திகள்
புதுச்சேரியில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்: புதுச்சேரி அரசு உத்தரவு..!!
காங்கிரசில் இருந்து பெண் எம்பி சஸ்பெண்ட்
ஜம்முவில் 37 இடங்களில் சிபிஐ சோதனை
பிப்ரவரி 24 முதல் 26 வரை சட்டீஸ்கரில் காங். மாநாடு
ரூ.16,133 கோடி வட்டிக்கு ஈடாக வோடபோன் ஐடியா நிறுவனத்தின் பங்குகளை பெற ஒன்றிய அரசு ஒப்புதல்
மும்பையில் தாக்குதல் நடத்தப்போவதாக தலிபான் பெயரில் மிரட்டல்: போலீஸ், என்.ஐ.ஏ.அதிகாரிகள் தீவிர விசாரணை
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!